search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டரில் மணல் அள்ள அனுமதிக்கோரி 28-ந் தேதி முற்றுகை போராட்டம்
    X

    டிராக்டரில் மணல் அள்ள அனுமதிக்கோரி 28-ந் தேதி முற்றுகை போராட்டம்

    • கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.
    • கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி, புத்தூர், குடிகாடு கிராமத்தில் தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.

    இந்த மணல் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இருந்தும் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நடப்பு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை டிராக்டர் எளிமையாக கிடைக்கப்பெற்றது. தற்போது டிராக்டர் மணல் கிடைப்பதில்லை.

    ஆகவே மீண்டும் டிராக்டரில் மணல் வேண்டி கனிம வள அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட டிராக்டர் உரிமையாளர்கள் சென்று முறையிட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

    எனவே மணல் குவாரியில் டிராக்டரில் மணல் அள்ள அனுமதிக்க கோரி வருகின்ற 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மணல் குவாரி முன்பு மறியல், முற்றுகை போராட்டம் நடத்துவதென கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு குறு கட்டுமான பணியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×