search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reduce"

    • சொத்துவரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தினர்.
    • திட்டப்பணிகளை விரைவாக முடிக்க இந்த சங்கம் வலியுறுத்தி வருகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 84-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்க தலைவரும், ராம்கோ குரூப் சேர்மனுமான பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையில் ராஜபாளையம்- தென்காசிரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா திருமணமண்டபத்தில் நடந்தது.

    முதன்மை சிறப்பு விருந்தினராக இதயம் வி.ஆர். முத்து கலந்து கொண்டு பேசினார். துணைத்தலைவர் பத்மநாபன் வரவேற்றார். செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் நாராயணசாமி முதன்மை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

    ராஜபாளையம் தொழில் வர்த்தகசங்க தலைவரும், ராம்கோ குரூப் சேர்மனுமான பி.ஆர். வெங்கட்ராமராஜா தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் வணிகர் நலனை மட்டுமல்லாது பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் தாமதமாக நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால பணிகள், தாமிரபரணி குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, புறவழிச்சாலை ஆகிய திட்டப்பணிகளை விரைவாக முடிக்க இந்த சங்கம் வலியுறுத்தி வருகிறது.

    மற்ற மாநகராட்சி, நகராட்சி சொத்து வரியை விட ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி அதிகமாக இருப்பதால் அடிப்படை சொத்து வரி விகிதத்தை குறைத்து அதற்கு பின் சொத்து வரியை நிர்ணயிக்கும் படி தொடர்ந்து கோரி வருகிறோம்.

    போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ெரயில்வே சுரங்க பாதை பணிகளையும் விரைந்து முடிக்க வலியுறுத்தி வருகிறோம். கூடுதல் ெரயில் வசதிகள், மின் மயமாக்கல் பணி இவற்றையும் விரைந்து முடிக்க கோரி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. புதிய நிர்வாகிகளை தொழிலதிபர் டைகர்சம்சுதின் முன்மொழிந்தார். கார்த்திக் வழிமொழிந்தார்.

    ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க தலைவராக பி. ஆர். வெங்கட்ராமராஜா, துணைத்தலைவர்களாக என் .கே. ஸ்ரீகண்டன்ராஜா, ஆர்.பத்மநாபன், செயலாளர்களாக எம் .சி. வெங்கடேஸ்வரராஜா, ஆர்.நாராயணசாமி, இணைச் செயலாளராக கே.மணிவண்ணன், பொருளாளர் பி.எம். ராமராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இணை செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் கிளை சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெட்ரோல், டீசல் கலால் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    அகில இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளருமான சண்முகப்பா பரமத்தி–வேலூரில் நிருபர்களிடம்  கூறியதாவது:

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தால் தான் லாரி தொழில் இலாபகரமான நடத்த முடியும்.

    டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததால் அண்டை மாநிலங்களுக்கு சென்று சரக்கு வாகனங்கள் எரிபொருளை பிடித்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கலாவதியான சுங்சாவடிகளை அகற்ற வேண்டும்.

    பழைய மற்றும் புதிய வாகனங்களுக்கு ஆயுள் வரி 6 சதவீகிதம் மட்டுமே வசூலித்தால் அரசுக்கு  வருவாய் அதிகரிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் டீசல் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட தென்மாநிலங்களில் விலை குறைக்கபடாதது அதிர்ச்சியை அளிக்கிறது.

    சரக்கு வாகனங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதன் மூலம் ஒளிவு மறைவின்றி சரக்கு எடுத்து செல்லப்படுவதால் ஆர்.டி.ஒ செக் போஸ்ட்களை அகற்ற வேண்டும்.கொரோனா காலத்திலும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

    லாரி உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் தமிழக முதல்வரிடம் எடுத்து கூறி சுமூக தீர்வை ஏன்படுத்தி தருவார் என எதிர்பார்க்கிறோம்.

    மத்திய,மாநில அரசுகள் வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை  குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    கோவா மாநிலம் மற்றும் புதுவை உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் என்ற அமைப்பு உள்ளது.

    இந்த ஆணையத்திடம் ஆண்டு தோறும் யூனியன் பிரதேச அரசுகள் புதிய நிதி ஆண்டுக்கான மின்சார வினியோகம் தொடர்பாக வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்.

    இதன் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்தவும் அனுமதி கோரப்படும். கடந்த ஜனவரி மாதம் புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மின் கட்டணம் தற்போதைய நிலையிலேயே நீடிக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் புதுவையில் மின் கட்டணம் உயரவில்லை.

    இந்த நிலையில் புதுவையில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைப்படி 4.59 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதே போல் தற்காலிகமான துணை கூடுதல் கட்டணம் 4 சதவீதம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கு மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி சராசரியாக யூனிட்டுக்கு ரூ.5.68 வசூலிக்கப்பட உள்ளது.

    வீட்டு உபயோக பயன் பாட்டுக்கு தற்போது ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, யூனிட்டுக்கு ரூ.1.50 ஆக உயர்த்தப்படுகிறது.

    அதேபோல் 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10-ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்கிறது.

    வர்த்தக பயன்பாட்டுக்கு நிரந்தர கட்டணம் ரூ.120 சேர்த்து 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.5.15-ல் இருந்து ரூ.5.50 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.6.15-ல் இருந்து ரூ.6.50 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 6.85-ல் இருந்து ரூ.7.20 ஆகவும் அதிகரிக்கிறது.

    குடிசை தொழில் பயன் பாட்டுக்கு ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.1.30-ல் இருந்து ரூ.1.50 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10-ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மக்களின் அமோக ஆதரவால் சுமார் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    ஆனால், தேர்தல் முடிவு அறிவித்த மறுநாளே மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இது, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஒழுங்குமுறை ஆணையம் சிபாரிசு செய்தும் அதை ஏற்க மறுத்த புதுவை அரசு தேர்தல் முடிந்ததும் அதை அமல்படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

    இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்ட போது, புதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்து பேசி விட்டு கட்டண குறைப்பு முடிவை அறிவிப்போம் என்று கூறினார். எனவே, கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GasCylinder #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை திடீர் திடீரென்று உயர்த்தப்பட்டு மக்கள் மீது பொருளாதார சுமை ஏறுவதை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நேற்றைய தினம் இந்திய ஆயில் நிறுவனம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. அதாவது மானியமில்லாத கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல மானிய விலை கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.2.89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. மானியம், மானியம் இல்லா சிலிண்டர் என எதுவாக இருந்தாலும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை, மக்கள் படும் கஷ்டம், சிறு குறு தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    எனவே, மத்திய அரசு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலாவது உடனடியாக எரிபொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறுஅவர்கூறியுள்ளார். 
    வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 100 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #TNGovt
    சென்னை:

    சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனங்கள் வலுத்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை வாபஸ் பெறக்கோரி  வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    அதே சமயம் சொத்து வரி உயர்வு மூலம் சுமார் ஆயிரத்து 160 கோடி ரூபாய் கிடைக்கும் என தமிழக அரசு எதிர்ப்பார்த்துள்ளது.

    இந்நிலையில், சொத்து வரி தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், சொத்து வரி சீராய்வு 2018-19 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதலே நடைமுறைக்க்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய வரிவிகிதத்தின் படி, முன் தேதியிட்டு வரி செலுத்த தேவையில்லை எனவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித வரியை 50 சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வரிவிகிதம் உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே விகிதத்தில் இருக்கும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNGovt
    மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க முடியும் என மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #PetrolPrice #Chidambaram
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருப்பதால், மற்ற பொருட்களின் விலை உயர்ந்து நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், விலை உயர்வில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.87 ஆகவும் இருந்தது. மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடும். இதற்கு மாநில அரசுகள் விதிக்கிற உள்ளூர் வரி அல்லது மதிப்பு கூட்டு வரிதான் காரணம் ஆகும்.



    மத்திய அரசைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

    பெட்ரோல் விலை உயர்வு குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி  ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்படும்போது ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு ரூ.15  சேமிக்கிறது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு 10 ரூபாய் கூடுதலாக வரி வைக்கிறது. எனவே, மத்திய அரசுக்கு பெட்ரோல் ஒவ்வொரு லிட்டருக்கும் ரூ. 25 கிடைக்கும். இந்த பணம் சராசரி வாடிக்கையாளருக்கு சொந்தமானது.

    எனவே, லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வரை குறைக்க முடியும், ஆனால் இந்த அரசாங்கம் இதை செய்யாது.  பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 அல்லது 2 ரூபாய் குறைப்பதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PetrolPrice #Chidambaram
    ×