search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துவரி"

    • நகராட்சியில் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • ஒட்டன்சத்திரம் நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் படி 2 ஆண்டு அரையாண்டுக்கான அக்டோபர் 2020 முதல் மார்ச் 2024 வரை சொத்து வரியை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தினால் நிகர சொத்து வரியில் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    மேலும் 2023 மற்றும் 2024 முதல் அரையாண்டு ஏப்ரல் 2003 முதல் செப்டம்பர் 2021 வரை சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் ஒரு சதவீதம் வசூல் செய்யப்படும் வரிகளை தங்கள் இல்லம் தேடி வருகை தரும் நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்

    எனவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரிகளை செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளுமாறு ஆணையாளர் மீனா தெரிவித்துள்ளார்.

    • சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • இடையர்பாளையம் தேவாங்கநகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் முகாம் நடக்கிறது.

    கோவை, 

    கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2023-24ம் நிதியாண்டின் இரண்டாம் அரையா ண்டிற்கான சொத்து வரியினை 01.10.2023 முதல் 31.10.2023-க்குள் செலுத்தும் சொத்து உரிமை தாரர்களுக்கு, சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    எனவே, பொதுமக்களின் வசதியினை கருத்தில் கொண்டு, கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை தொகை முதலிய அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்த கீழ்க்கண்ட பகுதிகளில் 30.09.2023 மற்றும் 01.10.2023 ஆகிய நாட்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடக்கிறது.

    மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.56 மற்றும் 57 பகுதிகளுக்கு ஒண்டிபுதூர்-நெசவாளர் காலனி சுங்கம் மைதானத்திலும்,

    மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 34ல் கவுண்ட ம்பாளையம் மணிமகால் பூம்புகார் நகர் பகுதியிலும், வார்டு 35ல் இடையர்பா ளையம் தேவாங்கநகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்திலும் இம்முகாம் நடக்கிறது.

    தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான வார்டு 89ல் சுண்டக்கா முத்தூர் சுகாதார ஆய்வா ளர் அலுவலகத்திலும்,

    வார்டு 97ல் கம்பீர விநாயகர் கோவில் வளாகத்திலும், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2 குடியிருப்போர் சங்க கட்டிடத்திலும் இம்முகாம் நடைபெறுகிறது.

    வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.11ல் ஜனதா நகர் சூர்யா கார்டன்ஸ் பகுதியிலும், வார்டு எண்.19ல் மணியக்காரன்பாளையம் அம்மா உணவகத்திலும், வார்டு எண்.25ல் காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், இம்முகாம் நடக்கிறது.

    மத்திய மண்டலத்தி ற்குட்பட்ட வார்டு 32ல் நாராயணசாமி வீதியிலும் வார்டு எண்.62ல் சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், வார்டு 63ல் பெருமாள் கோவில் வீதி பகுதியிலும், வார்டு எண்.80ல் கெம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், முகாம் நடக்கிறது.

    மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம்களிலும், மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரிகளை செலுத்தலாம். இந்த வசதியினை முழுமையாக பயன்படுத்தி, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப்பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அறிக்ைகயில் கூறியுள்ளார்.

    • சொத்துவரி மற்றும் தொழில்வரியினை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அக்டோபர் 1-ந்தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும்.
    • சொத்துவரி மற்றும் தொழில்வரியை முறைப்படி தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதனால், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை முறைப்படி தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சி தான் வசூலிக்கும் சொத்துவரி மூலம் மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தூய்மை பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், வரும் 30-ந்தேதிக்குள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்களும், வணிகர்களும், சொத்துவரி மற்றும் தொழில்வரியை செலுத்திட வேண்டுமென சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி 28-ந்தேதி (மிலாடி நபி) மற்றும் 30-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய அரசு விடுமுறை நாட்களில் ரிப்பன் கட்டிடத்திலுள்ள வருவாய்த்துறை தலைமையிடம், மண்டலங்களில் உள்ள வருவாய்த்துறையில் சொத்துவரி மற்றும் தொழில்வரி வசூல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. சொத்துவரி மற்றும் தொழில்வரியினை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அக்டோபர் 1-ந்தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும். எனவே, சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் 30-ந்தேதிக்குள் சொத்து மற்றும் தொழில்வரியை இணையதளத்திலும், தலைமையகத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செல்போனில் ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களது குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி தயார் செய்யப்பட்டு இருக்கிறது.
    • பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் உள்ளிட்ட சேவைகளுக்கு கியூ.ஆர். கோடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதனை செல்போனில் ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களது குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த செயலி தாம்பரம் மாநகராட்சியின் 48-வது வார்டில் சோதனை முறையில் அறிமுகம் செய்து உள்ளனர். இந்த வார்டில் உள்ள 2976 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1500 குடியிருப்புகளில் கியூ.ஆர். கோடு குறியீடு அட்டை ஒட்டப்பட்டு இருக்கிறது. இதனை முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

    துப்புரவு ஊழியர்கள் ஒரு கட்டிடத்தில் ஒட்டப்பட்டு உள்ள கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து அங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டதா? இல்லையா? என்பதையும் பதிவிட முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு அன்றாடம் கிடைக்கக்கூடிய சேவை சரியாக செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க முடியும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புகார் அளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கு தனித்தனியாக கியூ.ஆர். கோடு உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம். மேலும் இந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் புகாராக தெரிவிக்க முடியும்.

    பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது. இதன் பின்னர் மாநகராட்சி முழுவதும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பொதுமக்களின் வீண் அலைச்சல், நேர விரயம் தவிர்க்கப்படும் என்றார்.

    • சொத்து உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    • 30-ந்தேதிக்கு பிறகு செலுத்தினால் 1 சதவீதம் அபராதம் கட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்துவரியாகும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.

    வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் மூலம் ஆண்டுக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சொத்துவரி உயர்த்தப்பட்ட பிறகு நடப்பு ஆண்டின் சொத்துவரி இலக்கு ரூ.1,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முதல் அரையாண்டிற்கான சொத்துவரி செலுத்த வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அந்த வகையில் இதுவரையில் ரூ.605 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.200 கோடியை வசூலிக்க வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சொத்து உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 30-ந் தேதிக்கு பிறகு செலுத்தினால் 1 சதவீதம் அபராதம் கட்ட வேண்டும். அதனால் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனே செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    அதே வேளையில் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் சொத்து உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயப் போகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி முதல் இதற்கான சட்ட விதி அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் 'டிமிக்கி' கொடுத்து வரும் வணிக நிறுவனங்கள், சொத்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

    இதுகுறித்து வருவாய் அதிகாரிகள் கூறியதாவது:-

    நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாமல் 100 பேர் இருக்கிறார்கள். அவர்கள் ரூ.120 கோடி சொத்து வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டது. உரிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். நீண்ட காலமாக சொத்துவரி கட்டாமல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய சட்ட விதிகளின்படி அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு அதன் மூலம் சொத்துவரியை பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    எனவே 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாவிட்டால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடரும். இது முதல்முறையாக செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.
    • விவரங்களுக்கு exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் சொந்த வீடு, அடுக்குமாடி போன்றவற்றின் சொத்துவரி குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் சர்வே படிவத்தை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.

    பின்னர் உதவி இயக்குனர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.23, 5-வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் -641 604 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
    • விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் ஜான் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்க தலைவர் ஜான் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திலுள்ள சுமார் 7000 திருமண மண்டபங்களுக்கு தொடர்ச்சியாக சொத்து வரி, மின் கட்டணம், வணிக உரிம கட்டணம் என்று அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

    கொரோனா கால நஷ்டத்திலிருந்து இன்றளவும் மீள முடியாமல் திணறிக்கொண்டு இருக்கும் திருமண மண்டபங்கள் இவ்வாறான வரிகளால் திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபங்களை பராமரிக்க முடியாமல், வங்கி கடனை செலுத்த முடியாமலும் மண்டபங்களை மூடும் தருவாய்க்கு வந்துவிட்டார்கள். இந்த விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

    மேலும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டால் திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபடும் கேட்டரிங், நடேஸ்வரன், புகைப்படம், அலங்காரம், புரோகிதர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். எனவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன.
    • சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க. தனசேகரன் பங்கேற்று பேசியதாவது:-

    எனது தணிக்கை குழு ஆய்வின் போது அனைத்து மண்டலங்களிலும் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான சொத்து வரி கணக்குகள், சொத்து இணைப்பு, இடித்து புதிய கட்டிடம் கட்டுதல், ராங் பிராப்பர்டி போன்ற காரணங்களுக்காக நீக்கப்படுகின்றன.

    இக்கணக்குகளில் பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு மண்ட லம் 1-ல் 2019-20 நிதியாண்டில் சுமார் 682 வரிக் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் வரி நிலுவை தொகை சுமார் 3.47 கோடிகளாகும்.

    இதேபோல் 2020-21 நிதியாண்டில் மண்டலம் 3-ல் 517 சொத்துவரி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதன் நிலுவை தொகை ரூ. 68.61 லட்சத்துக்கு மேல் உள்ளது.

    இதே நிலை அனைத்து மண்டலங்களிலும் காணப்படுகிறது. அதனால் ஆணையர் அவர்கள் சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    மண்டலம் 3-ல் 2017-18 நிதியாண்டில் இருந்து 12 அரையாண்டுகளுக்கு மேலாக விஜய் ராஜ் சுரானா, தினேஷ் சந்த் சுரானா, கௌதம் ராஜ் சுரானா ஆகியோர் சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாமல் மொத்தமாக சுமார் ரூ. 18.83 லட்சம் நிலுவையாக வைத்து உள்ளனர். இதனை உடனடியாக வசூலிக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையா ளர் உத்தரவிட வேண்டும். மண்டலம் 2-ல், தணிக்கை குழு களஆய்வில் அந்த மண்டலத்தில் இருக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பல ஏக்கர் நிலங்களின் விவரங்கள் மற்றும் அவைகளின் சொத்து வரி நிலுவைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனை அடுத்து அந்நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 100 கோடி மதிப்புள்ள 3.3 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்ட செய்தி சில தினங்களில் பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்தன. இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல குழு தலைவர் ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    அதேபோல் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரியின் காலிமனை சொத்து வரி நிதியாண்டு 2020-21 வரை சுமார் ரூ.1.3 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது என தணிக்கை ஆய்வில் கண்ட றியப்பட்டது. இதற்கு மண்டல அதிகாரிகள் இதனை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தனர். அதனால் இந்த பெரும் நிலுவை தொகை முழுமையாக வசூலிக்க ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதுமட்டுமல்லாமல், சுமார் 2.58 லட்சம் சதுரடிக்கு மேல் இயங்கி வரும் இந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு நிதியாண்டு 2020-21 வரை சொத்துவரி எதுவும் விதிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் சொத்துவரி விதிக்கப்பட்டிருந்தால் 2020-21 வரை சுமார் ரூ.29,92,320 வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அதனால் இந்த கல்லூரி சொத்து வரி செலுத்துவதில் இருந்து ஏதேனும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அப்படி இல்லையென்றால் சொத்துவரி வசூலிக்க ஆணையர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தணிக்கை குழு ஆய்வின் பொழுது அரசின் விதிகளுக்கு மாறாக மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர், உதவி வருவாய் அலுவலர், உதவி கோட்ட மின்பொறியாளர் அதிகாரிகள் செல்ப் செக் மூலம் பல கோடி ரூபாய் ரொக்கமாக எடுத்து வருவது தெரியவந்து உள்ளது. மேலும் இதனை செலவு செய்ததற்கான ஆதாரம் மற்றும் செலவு சீட்டுகள் முழுமையாக தணிக்கைக்கு அளிக்கப்படுவதும் இல்லை. உதாரணத்திற்கு மண்டலம் 9-ல் நிதி யாண்டு 2020-21-ல் வெறும் 37 செல்ப் செக் மூலம் சுமார் ரூ 6.34 கோடிக்கு மேல் ரொக்கம் எடுக்கபட்டுள்ளது. அதாவது ஒரு செல்ப் செக் மூலம் சராசரியாக ரூ. 17.13 லட்சம் ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிதியாண்டு 2019-20-ல் சுமார் ரூ.2.3 கோடிக்கு மேல் செல்ப் செக் மூலம் பணம் எடுக்கபட்டுள்ளது. இன்றுவரை இதனை முறையாக தணிக்கை ஆய்வுக்கு உட்படுத்தவும் இல்லை. எனவே செல்ப் செக் மூலம் பணம் எடுக்கும் முறையை உடனடியாக நிறுத்த அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

    மேலும் இதுவரை செல்ப் செக் மூலம் எடுக்கப்பட்ட பணம் முறையாக தணிக்கை செய்யப்பட்டதை உறுதி செய்து அதன் முழு விவரத்தை தணிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    மண்டலம் 9-ல், நிதி யாண்டு 2020-21-ல் 38 அம்மா உணவகங்களில் மொத்த வரவு ரூ. 1,55,34,200-ஆகவும், இதற்கான மொத்த செலவு சுமார் ரூ.9,54,51,092-ஆக உள்ளது. இதில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வாங் குவதற்கான செலவு ரூபாய் 4,62,67,592 ஆகவும், அம்மா உணவகங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தினக்கூலி மட்டும் சுமார் ரூபாய் 4,91,83,500-ஆகவும் உள்ளது.

    இப்படி 7 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 892 ரூபாய் வருவாயை விட மிக அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அதீத செலவீனத்தை முழுமையாக விசாரணைக்கு ஆணையர் உட்படுத்த வேண்டும்.

    தணிக்கை குழுவிற்கு தங்கும் விடுதிகள் குறித்து பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையான தங்கும் விடுதிகள் முறையாக அரசின் வழி காட்டுதல்களை பின்பற்றுவதில்லை எனவும் முறையாக வரி விதிக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி எல்லைக்குப்பட்ட அனைத்து தங்கும் விடுதிகள் முறையாக அரசின் விதிகள், மாநகராட்சியின் அனுமதி மற்றும் வரிகள் ஆகியவை முறையாக பின்பற்றபடுகின்றனவா என ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்த வேண்டும்.

    முதலமைச்சரின் சிங்கார சென்னை 2.0 திட்டதின் கீழ் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வந்தாலும் மாநகராட்சி முழுக்க வரையபட்டுள்ள சுவர் விளம்பரங்கள் இன்னும் முழுமையாக அழிக்கபடாமலும் மேலும் தினம் புது புது சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டும் வருகின்றன. எனவே ஆணையர் இந்த சுவர் விளம்பரங்களை முழுமையாக அழித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைய அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி நடவடிக்கைகளை துரித்த படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சொத்துவரியை செலுத்தாவிட்டால் ஜூன் முதல் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையாளர் தகவல் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சியில் சொத்துவரியை உயா்த்தி சமீபத்தில் நகரசபை கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரிகளை மே மாதம் இறுதிக்குள் பொதுமக்கள் செலுத்த வேண்டும் என நகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

    இது குறித்து நகராட்சி ஆணையாளர் சந்திரா கூறியதாவது:-

    ராமநாதபுரம் நகராட்சியில் பழைய வரிபாக்கியை குறைந்த அபராதத்துடன் நடப்பு மாதமான மே முடிவதற்குள் செலுத்தலாம். 

    ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து புதிய முறையில் வரி விதிக்கப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டுவிடும். ஆகவே புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு ஏற்கெனவே உள்ள பழைய சொத்து வரிகளுக்குரிய அபராதம் இரு மடங்காக விதிக்கப்பட உள்ளது. அபராதத் தொகையை கூடுதலாக செலுத்துவதைத் தவிா்க்க மக்கள் விரைந்து வரிகளை செலுத்துவது அவசியம் ஆகும். 

    ஜூன் மாதத்துக்குள் வரிகளைச் செலுத்தாதவா்கள் மீது நகராட்சி சட்டப்படி நட வடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×