search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் படைவீரர்கள், விதவையர் சொத்துவரி கணக்கெடுப்பு - 8-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்

    முன்னாள் படைவீரர்கள், விதவையர் சொத்துவரி கணக்கெடுப்பு - 8-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

    • தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.
    • விவரங்களுக்கு exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் சொந்த வீடு, அடுக்குமாடி போன்றவற்றின் சொத்துவரி குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் சர்வே படிவத்தை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.

    பின்னர் உதவி இயக்குனர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.23, 5-வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் -641 604 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×