search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்படும்-தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தகவல்
    X

    ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்படும்-தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தகவல்

    • ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்படும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்துள்ளார்.
    • இதுகுறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைப்பது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவையும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளரையும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நேரத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளரை நான் நேரில் சந்தித்து ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி குறைப்பது தொடர்பாக வலியுறுத்தினேன்.

    அதற்கு அவர் இன்னும் சில தினங்களில் ராஜபா ளையம் நகராட்சியில் சொத்து வரி குறைக்க அரசாணை வெளியிடப்படும் என்றார். ஆகவே அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் முயற்சியால் வருகிற ஏப்ரல் ராஜபாளையம் ெரயில்வே மேம்பாலம் எவ்வாறு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளதோ, எவ்வாறு குடிநீர் கட்டணம் குறைக்கப்பட்டதோ, அதேபோல் இன்னும் சில தினங்களில் ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×