என் மலர்
நீங்கள் தேடியது "commission"
- பிஎஸ்சி நர்சிங் ஆகிய படிப்பு களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
- ரூ.14 லட்சமும் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
ஒய்வூபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கண்ணம்மாள் தலைமையிலான கட்டண க்குழு தனியார் சுயநிதி கல்லூரியில் உள்ள முதுகலை மருத்துவம், பல் மருத்துவம், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பிஎஸ்சி நர்சிங் ஆகிய படிப்பு களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா ஆகிய 3 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7.59 லட்சத்தில் இருந்து ரூ.7.95 லட்சமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.22.77 லட்சத்தில் இருந்து ரூ.23.90 லட்சமாகவும், கிளினிக்கல் சாரா முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.6.22 லட்சத்தில் இருந்து ரூ.6.55 லட்சமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.44 லட்சத்தில் இருந்து ரூ.13.05 லட்சமாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை பல் மருத்துவ படிப்பு (எம்.டி.எஸ்) மாகி பல் மருத்துவ கல்லூரியில் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6.22 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.14 லட்சம், பாரா கிளினிக்கல் சார்ந்த முதுநிலை பல் மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.5.53 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7.19 லட்சம் என பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6.22 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.14 லட்சமும் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிம்ஸ் மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3.80 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், வெங்கடே ஸ்வரா மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3.29 லட்சத்தில் இருந்து ரூ.3.80 லட்சமாகவும், 3 தனியார் கல்லூரிகளிலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.16 லட்சத்தில் இருந்து ரூ.16.80 லட்சமாகவும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.21 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு ள்ளது. புதுவையில் உள்ள 3 தனியார் நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்.சி நர்சிங் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.42 ஆயிரம் என பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது
புதிய கல்வி கட்டணமானது, சேர்க்கை கட்டணம், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வகம், கணினி, பராமரிப்பு மற்றும் வசதிகள் கட்டணம் மற்றும் பிற செலவுகள் போன்ற பல்வேறு கட்டணங்களை உள்ளடக்கிய ஆண்டு கட்டணமாகும். கட்டண குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை தவிர, கல்வி நிறுவனங்களுக்கு எந்த விதமான கூடுதல் கட்டண த்தையும் வசூலிக்க உரிமை இல்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கட்டண குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவலை சுகாதார சார்பு செயலர் கந்தன் தெரிவித்துள்ளார்.
- கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023 அரவைப் பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது
- கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023 அரவைப் பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023 அரவைப் பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 2500 டன் வீதம் அரவை நடைபெற்று வருகிறது. தற்போது வரை 2 லட்சத்து 45 ஆயிரம் டன் கரும்பு அரைக்கப்பட்டு உள்ளது. மேலும் சர்க்கரை ஆலையில் கூடுதல் மின் உற்பத்தி திட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர். கே பன்னீர்செல்வம் அவர்களின் உத்தரவின் படி சென்னை சர்க்கரை துறை ஆணையத்தில் இருந்து தலைமை பொறியாளர் பிரபாகரன் தலைமை ரசாயனார் ரவிச்சந்திரன். தலைமை கரும்பு அலுவலர் மாமுன்டி மற்றும் அதிகாரிகள் சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வரும் 2023-2024 அரவை பருவத்தில் கூடுதல் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த ஆண்டிற்கு பதிவு செய்யப்பட்ட கரும்புகள் முழுவதும் அரவை செய்த பின்பு அரவை நிறுத்தப்படும் எனவும் இதனால் கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்புகளை விரைந்து வெட்டி அனுப்பி ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலையில் தலைமை ரசாயனார் செல்வேந்திரன் தலைமை பொறியாளர் ராம்குமார் தலைமை கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனே இருந்தனர்.
- தமிழ்நாடு பலா பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்க விழா நடந்தது
- சங்க தலைவர் சி. ஆர். மாயவேல் விழாவிற்கு தலைமை வகித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு பலா பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்க விழா நடந்தது சங்க தலைவர்சி. ஆர். மாயவேல் விழாவிற்கு தலைமை வகித்தார். துணைத்தலைவர் கே.பாலமுருகன்மு ன்னிலை வகித்தார். செயலாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். கவுரவ தலைவர் சூசைமரி சங்கப் பெயர் பலகையை திறந்து வைத்தார் துணைச் செயலாளர் கே .ஆர். விஜயகுமார், பொருளாளர்ஏ.டி. சுந்தரமூர்த்தி, தியாகி டிரான்ஸ்போர்ட் அதிபர் காமராஜ் மற்றும் புதிய நிர்வாகிகள் பலா கமிஷன் மண்டி அதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
கூட்டத்தில் பலா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். விவசாயிகள் பலா காய்களை பலா மார்க்கெட்டில் பலா கமிஷன் மண்டி மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.சங்கத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி,மாமுல்,மேஸ்திரி மற்றும் சுமை தூக்கும் தொழிலாளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். கூலி, மாமூல் ஆகியவைகளை வியாபாரிகளிடம் கேட்கக் கூடாது. பலா கமிஷன் மண்டிஉரிமையாளர்க ளிடம் மட்டும் கேட்டுவாங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது. முடிவில்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்குசங்க அடையாள அட்டைவழங்கப்பட்டது.
- கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும்
- இன்றே பணத்தை தந்துவிட்டால் நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம்.
நெல்லை:
நெல்லை மாநகர தி.மு.க. நிர்வாகி ஒருவர், ஒப்பந்ததாரருடன் பேசுவது போல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடக்கவுள்ள ஒப்பந்த பணிக்கு 18 சதவீதம் கமிஷன் வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகி ஒப்பந்ததாரரிடம் கூறுகிறார்.
மேலும், நெல்லை மத்திய மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மாநகரத்தில் உள்ள பணிகள் தனக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. நான் பலருக்கும் இந்த கமிஷனை பிரித்து கொடுக்க வேண்டி உள்ளது.
எனவே கண்டிப்பாக 18 சதவீதம் கமிஷன் தந்தாக வேண்டும். நாளைக்கு தான் டெண்டர். நீங்கள் இன்றே பணத்தை தந்துவிட்டால் நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம் என்று அந்த நிர்வாகி கூறுகிறார்.
அப்போது எதிரே அமர்ந்து பேசும் ஒப்பந்ததாரர், எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். என்றும், ஜிஎஸ்.டி. தொகையை கழித்துக்கொள்ளுங்கள். அது மட்டுமே 55 லட்சம் ரூபாய் வருகிறது என்று கூறுகிறார்.
ஆனால் அந்த நிர்வாகி, அது எல்லாம் முடியாது. கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
- சில கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கமிஷன் வாங்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
திருவாரூர் மாவட்டம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெருமளவில் குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
உடனடியாக நெல் கொள்முதல் செய் யாமல் இரண்டு நாட்கள் காலதாமதமாகிறது.
நெல் ஈரப்பதமும் அதிகமாகிறது.
மேலும் சில கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கமிஷன் வாங்கப்படுகிறது.
இது சம்பந்தமாக விவசாயிகளிடமிருந்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு புகார் வந்துள்ளது.
எனவே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் ரெக்கார்டிங் வசதியுடனும் பொருத்தி நெல் மூட்டைக்குகமிஷன் பெறும் செயலை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் தெரிவித்துள்ளது.
மதுரை
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உருவாக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில ஆணைய தலைவர் தலைமையில் துணைத் தலைவர் மற்றும் 4 உறுப்பி னர்களுடன் விழிப்புணர்வு ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் வருகிற 8-ந் தேதி நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் ஆணைய தலைவர், துணைத் தலைவர், உறுப்பி னர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கு பெற உள்ளனர். மேலும் விழிப்புணர்வு ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட சிறப்பு குற்றத்துறை அரசு வக்கீல்கள், ஆதி திராவி டர் மற்றும் பழங்குடி யினருக்காக பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை) ஆகியோர் பங்கு பெற உள்ளனர்.
மேற்கண்ட தகவலை ஆதிதிராவிடர் பழங்குடியி னர் மாநில ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வந்தவாசியில் நாளை மாலை 4.45 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர், செய்யாறில் மாலை 5.30 மணிக்கும், ஆரணியில் மாலை 6.30 மணிக்கும், போளூரில் இரவு 7.30 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.
பின்னர், திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கலசப்பாக்கத்தில் இரவு 8 மணிக்கு பிரசாரம் செய்கிறார். இதையடுத்து, திருவண்ணாமலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றுகிறார். அதன் பிறகு, திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் தங்குகிறார்.
இதைத் தொடர்ந்து மறுநாள் 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு கீழ்பென்னாத்தூரில் பேசுகிறார்.
பின்னர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது பிரசாரத்தை முடித்து கொண்டு விழுப்புரம் மாவட்டம் செல்கிறார்.
முதல்-அமைச்சரின் பிரசாரம் நடைபெறும் இடம் மற்றும் அவர் செல்லும் வழித்தடம், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். #LSPolls
சேலம்:
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு, மாநில அரசு சேர்ந்து கொண்டு சேலத்திற்கும் சென்னைக்கும் விரைவாக செல்லக்கூடிய 8 வழிச்சாலை என்ற பெயரில் 5 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுடைய நிலங்களை அபகரித்து 10 ஆயிரம் ரூபாய் கோடி செலவில் சாலை அமைக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஒரு திட்டத்தை அறிவிக்கிறபோது, சம்பந்தப்பட்ட விவசாயிகளுடைய, பொதுமக்களுடைய கருத்தறிந்து அதற்கு பிறகு செயல்படுத்த முன்வர வேண்டும். அல்லது அறிவித்த பிறகு மக்கள் கூறிய கருத்துக்களுக்கு செவி கொடுத்து கேட்க வேண்டும்.
அதற்கு மாறான முறையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மிக கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு விவசாயிகளை அச்சுறுத்தி பெண்களை அச்சுறுத்தி நிலங்களை கையகப்படுத்தி கல் ஊன்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.
கல் ஊன்றுகின்ற இடத்தில் அனைத்திலும் பெண்களே முன்னின்று கல்களை அகற்றுகின்ற போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த 8 வழிச்சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் திரும்ப, திரும்ப வலியுறுத்தி கூறிகின்றோம். அதற்கான முறையில் தான் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெறுகிறது.
அரசு இந்த திட்டத்தை கைவிடவில்லை என்று சொன்னால் 5 மாவடங்களிலும் இந்த போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் மற்றும் ஒரே கருத்துக்கள் உடைய அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பிரமாண்டமான போராட்டங்கள் நடத்துவதற்கு ஆயத்த ஆவோம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையிலும் சரி, வெளியிலும் சரி பொய் சொல்கிறார். நேற்று வரை விவசாயிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிலர் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்கள்.
ஆகவே தானாகவே விவசாயிகள் முன்வந்து 90 சதவீத நிலத்தை கொடுத்து விட்டார்கள் என்று முதல்-அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய்.
8 வழி பசுமைச்சாலையில் 7, 8 மலைகள் பறிபோகிறது. இந்த மலைகளை உடைத்து அதில் இருக்கிற விலை மதிக்க முடியாத கனிம வள செல்வங்களை கொள்ளையடிப்பதற்காக தான் இந்த சாலையே போடப்படுகிறது என்பதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம்.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து இவர்கள் கமிஷன் வாங்குவதற்கு இந்த சாலையை போடுகிறார்கள். பொதுமக்களுக்காக அல்ல.
இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #chennaisalemgreenexpressway