search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டம்
    X

    விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டம்

    • விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உருவாக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில ஆணைய தலைவர் தலைமையில் துணைத் தலைவர் மற்றும் 4 உறுப்பி னர்களுடன் விழிப்புணர்வு ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் வருகிற 8-ந் தேதி நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் ஆணைய தலைவர், துணைத் தலைவர், உறுப்பி னர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கு பெற உள்ளனர். மேலும் விழிப்புணர்வு ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட சிறப்பு குற்றத்துறை அரசு வக்கீல்கள், ஆதி திராவி டர் மற்றும் பழங்குடி யினருக்காக பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை) ஆகியோர் பங்கு பெற உள்ளனர்.

    மேற்கண்ட தகவலை ஆதிதிராவிடர் பழங்குடியி னர் மாநில ஆணையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×