search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒப்பந்ததாரரிடம் 18 சதவீதம் கமிஷன் கேட்கும் நெல்லை மாநகர தி.மு.க. நிர்வாகி
    X

    ஒப்பந்ததாரரிடம் 18 சதவீதம் கமிஷன் கேட்கும் நெல்லை மாநகர தி.மு.க. நிர்வாகி

    • கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும்
    • இன்றே பணத்தை தந்துவிட்டால் நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம்.

    நெல்லை:

    நெல்லை மாநகர தி.மு.க. நிர்வாகி ஒருவர், ஒப்பந்ததாரருடன் பேசுவது போல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடக்கவுள்ள ஒப்பந்த பணிக்கு 18 சதவீதம் கமிஷன் வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகி ஒப்பந்ததாரரிடம் கூறுகிறார்.

    மேலும், நெல்லை மத்திய மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மாநகரத்தில் உள்ள பணிகள் தனக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. நான் பலருக்கும் இந்த கமிஷனை பிரித்து கொடுக்க வேண்டி உள்ளது.

    எனவே கண்டிப்பாக 18 சதவீதம் கமிஷன் தந்தாக வேண்டும். நாளைக்கு தான் டெண்டர். நீங்கள் இன்றே பணத்தை தந்துவிட்டால் நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம் என்று அந்த நிர்வாகி கூறுகிறார்.

    அப்போது எதிரே அமர்ந்து பேசும் ஒப்பந்ததாரர், எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். என்றும், ஜிஎஸ்.டி. தொகையை கழித்துக்கொள்ளுங்கள். அது மட்டுமே 55 லட்சம் ரூபாய் வருகிறது என்று கூறுகிறார்.

    ஆனால் அந்த நிர்வாகி, அது எல்லாம் முடியாது. கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×