search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kal Quary"

    • நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் பயன் அடைந்து வருகின்றனர்.
    • சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில் குறித்து தவறான செய்திகளை புகார் மனுவாக கொடுத்து வருகின்றனர்

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட ஜல்லி கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் கல்குவாரி மற்றும் கிரசர் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றும்,சுற்றுச் சூழல் மற்றும் கனிம வளத் துறை அனுமதி பெற்றும், குவாரியிலிருந்து உரிய நடைச்சீட்டு பெற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரி தொழில் செய்து வருகின்றோம். கல்குவாரியிலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள சாலை பணி, அரசு கட்டிட பணி மற்றும் இதர அத்தியாவசிய கட்டிட பணிகளின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. அனைவரும் அரசிற்கு செலுத்தும் பர்மிட் கட்டணம், சீனியரேஜ் தொகை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டண தொகையையும் செலுத்தி வருகிறோம். சட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்து வருகிறோம். மேலும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய் பல கோடி கடன் பெற்று மாத தவணைகள் செலுத்தி வருகிறோம். இத்தொழில் மூலம் நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் அரசு அலுவலகங்களுக்கு சென்று கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில் குறித்து தவறான செய்திகளை புகார் மனுவாக கொடுத்து வருகின்றனர்.கல் குவாரி உரிமையாளர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறாக பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்தும், மேலும் எங்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். இதனால் எங்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. சட்டபூர்வமாக உரிமம் பெற்று தொழில் செய்து வரும் எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பணம் பறிக்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் என்கிற போர்வையில் மிரட்டல் போக்கை கையாளுகின்றனர். அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குவாரிகள், ஜல்லி உற்பத்தி நிலையங்கள், தார் கலவை தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முறைகேடுகள்.
    • சட்டமீறல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்திட வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் வனஜா ஆகியோரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

    பல்லடம் தாலூக்கா கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, சாமளாபுரம், பூமலூர், 63 வேலம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள குவாரிகள், ஜல்லி உற்பத்தி நிலையங்கள், தார் கலவை தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முறைகேடுகள், சட்டமீறல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், மனுதாரர், மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரையும் உள்ளடக்கி ஆய்வுக் குழு அமைத்து முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இக்கல் குவாரி அமையவுள்ள இடத்துக்கு 300 மீட்டா் சுற்றளவில் குடியிருப்புகள் இல்லை என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கொடுமணல் அகழ்வாய்வு கூடம், விஜயமங்கலம் சமணா் கோயில்கள் ஆகியவை இருப்பதை அறிக்கையில் மறைத்துள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளா்கள் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுப்பாளையத்தில் தனியாா் கல் குவாரி மற்றும் கிராவல் குவாரி அமைப்பது தொடா்பான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இக்கல் குவாரி அமையவுள்ள இடத்துக்கு 300 மீட்டா் சுற்றளவில்கு டியிருப்புகள் இல்லை என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் குவாரி அமையவுள்ள இடத்தில் இருந்து 300 மீட்டா் தொலைவுக்குள் 15 வீடுகள் உள்ளன.மேலும், 15 கிலோ மீட்டா் சுற்றளவில் அகழ்வாய்வு இடங்கள், தொல்லியல் சின்னங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொடுமணல் அகழ்வாய்வு இடம், விஜயமங்கலம் சமணா் கோயில்கள் ஆகியவை இருப்பதை அறிக்கையில் மறைத்துள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளா்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

    மேலும்இந்தப் பகுதியில் கல் குவாரி அமைக்கக் கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்தனா்.இதையடுத்து, கல் குவாரி அமைப்பது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆய்வு நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்தாா்.கூட்டத்தில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் சரவணகுமாா், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், சூழலியல் செயல்பாட்டாளா் பாரதி, ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    ×