search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prakash raj"

    • 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார்.
    • அவரின் 50 வது படமான ’ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

    நடிகர் , பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என தனுஷ் பன்முகத்தன்மையுடையவர். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

    இந்நிலையில் ராயன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி படத்தின் முதல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடுவதாக தெரிவித்து போஸ்டர் ஒன்றை எக்ஸ் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

    அதில் தனுஷ், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் நின்றுக் கொண்டு இருக்கின்றனர். இப்பட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
    • என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பா.ஜ.க.விடம் பணம் இல்லை என்றார்.

    பெங்களூரு:

    நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    இதற்கிடையே, நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் பரவியது. ஆனால் இந்த தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பா.ஜ.க.விடம் பணம் இல்லை என பதிவிட்டுள்ளார்.

    • இத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என எந்தவொரும் கட்சியும் கூற முடியாது.
    • காங்கிரஸ் அல்லது மற்ற கட்சிகளாக இருந்தாலும் சரி, அவ்வாறு தெரிவித்தால் அது ஆணவம்.

    நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜனதாவின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். சிக்மங்களூர் பிரஸ் கிளப்பில் பேசிய பிரகாஷ் ராஜ், பா.ஜனதா 400 இடங்ளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனக்கூறி வருவதை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    420 (மோசடி) செய்தவர்கள் மட்டுமே தேர்தலில் 400 இடங்களை பிடிப்பதை பற்றி பேசி வருகிறார்கள். காங்கிரஸ் அல்லது மற்ற கட்சிகளாக இருந்தாலும் சரி, அவ்வாறு தெரிவித்தால், அது அவர்களின் ஆணவத்தை பிரதிபலிப்பதாகும்.

    மக்கள் வாய்ப்பு அளித்தால் மட்டுமே நீங்கள் உங்களுடைய ஒரு தொகுதியில் வெற்றிபெற முடியும். இத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என எந்தவொரும் கட்சியும் கூற முடியாது. அப்படி கூறும் என்றால் அது அவர்களின் ஆணவம்.

    இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, "எங்களுடைய 3-வது தடவையான ஆட்சி வெகு தூரத்தில் உள்ளது. அதிகபட்சமாக 100 முதல் 125 நாட்கள் உள்ளது. ஒட்டுமொத்த நாடும் 400 இடங்கள் எனச் சொல்கின்றன. மல்லிகார்ஜுன கார்கே கூட இதைச் சொல்கிறார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    கார்கே "பா.ஜனதா தற்போதே மெஜாரிட்டியுடன் இருக்கிறது. இது மக்களவை தேர்தலில் 400 இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என்றார். இதற்குதான் மோடி மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார்.
    • இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும்.

    மார்ச் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சித்தாபுராவில் உள்ள ஹலகேரி என்ற கிராமத்தில், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பியுமான அனந்த் குமார் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது, "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார். தற்போது மக்களவையில் 2/3 பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.

    எனவே, அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும். அதற்கு, இந்த பெரும்பான்மை போதாது." எனப் பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.

    இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக எம்.பியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக எம்.பி அனந்த் குமார் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், பாஜக அஜெண்டாவின் வெளிப்படையான ரகசியம். துரோகிகளின் உள் சூழ்ச்சிகள் என அவர் பதிவிட்டுள்ளார்.

    • பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை எனக் கூறியிருந்தார்.
    • என்னுடைய பாரதமே என்னுடைய குடும்பம் என பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.

    பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என பொதுக்கூட்டத்தில் பேசும்போது விமர்சனம் செய்திருந்தார். இதனையொட்டி பா.ஜனதா தலைவர்கள் மோடியின் குடும்பம் என எக்ஸ் தளத்தில் தங்களது பெயருக்கு பின் குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நடிகரான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் "டியர் சுப்ரீம் லீடர் (பிரதமர் மோடி) மணிப்பூர், விவசாயிகள், வேலைவாய்ப்பின்மை ஆகிய மக்கள் உங்களுடைய குடும்பதைச் சேர்ந்தவர்கள்தானா?" எனக் கேட்டுள்ளார்.

    பிரகாஷ் ராஜ் பா.ஜனதாவின் கருத்துக்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் மோடி குடும்பம் என பா.ஜனதா தலைவர்களில் கூறி வரும் நிலையில், பிரகாஷ் ராஜ் இவ்வாறு கேட்டுள்ளார்.

    நேற்று சென்னையில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் என்னை திட்ட, வசைப்பாட ஒரு புதிய திட்டத்தை கண்டுபிடித்துள்ளார்கள்.

    இந்த மோடிக்கு குடும்பம் கிடையாது. அதனால்தான் இப்படி பேசுகிறார் என்று கூறுகிறார்கள். என் உயிரினும் மேலான குடும்பங்களே, எனக்கு 16 வயதாகும்போது நான் என் வீட்டை துறந்து வெளியேறினேன். இந்த தேசத்திற்காக நான் வெளியேறினேன்.

    நீங்கள்தான் என் குடும்பம். பாரத நாட்டின் மக்கள்தான் என்னுடைய குடும்பத்தார். தேசத்தின் இளைஞர்கள் என் குடும்பத்து மக்கள். ஆகையால்தான் அவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்க இரவு, பகலாக கடுமையாக உழைத்து வருகிறேன்.

    யாருமே இல்லாதவர்கள், நிர்கதியாக நிற்பவர்கள், அனாதைகள் அனைவருக்கும் இந்த மோடி சொந்தமானவன். என்னுடைய பாரதமே என்னுடைய குடும்பம்.

    • நடிகர் விஜய்-யின் சினிமா கேரியர்களில் சிறந்ததாக இன்றளவும் பேசப்படும் படமாக கில்லி உள்ளது.
    • ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து மீண்டும் கில்லி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது.

    நடிகர் விஜய்-திரிஷா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கில்லி'.

    இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். வித்யாசாகர் இசை அமைப்பில் படத்தின் அனைத்து பாடல்களும் மாஸ் 'ஹிட்'. இந்த படத்தில் பிரகாஷ்ராஜின் வில்லன் கேரக்டர் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.


    நடிகர் விஜய்-யின் சினிமா கேரியர்களில் சிறந்ததாக இன்றளவும் பேசப்படும் படமாக கில்லி உள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து மீண்டும் அந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது.


    'கில்லி' படம் வருகிற ஏப்ரல் 27- ந்தேதி மீண்டும் 'ரீ ரிலீஸ்'(மறு வெளியீடு) செய்யப்படும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறையில் 'கில்லி' வெளியாவது விஜய் ரசிகர்களையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • கவர்ச்சிகரமான திட்டங்களை பார்த்த பொதுமக்கள், அந்த நகைக்கடையின் திட்டங்களில் சேர்ந்தனர்.
    • ரூ.100 கோடி அளவில் நடைபெற்ற மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சென்னை:

    திருச்சியை தலைமையிடமாக கொண்டு பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டது. இந்த கடையின் கிளைகள் மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சென்னை உள்பட 8 இடங்களில் இருந்தன. இந்த கடை நிர்வாகத்தினர், பல்வேறு புதிய நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர்.

    கவர்ச்சிகரமான இந்த திட்டங்களை பார்த்த பொதுமக்கள், அந்த நகைக்கடையின் திட்டங்களில் சேர்ந்தனர். ஆனால், பலரது சீட்டுகள் முதிர்வு அடைந்துவிட்ட நிலையில், அதற்குரிய பணத்தையும், நகையையும் வழங்காமல் அந்த கடை நிர்வாகம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. ரூ.100 கோடி அளவில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அந்த கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதோடு பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகிய 2 பேரையும் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்ததாக பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்தது.

    இந்த நிலையில், பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

    இதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

    அதில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரகாஷ் ராஜூ ஓரிரு நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார்.
    • அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்த 'சித்தா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது. 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவு தெரிவித்து பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளத்தில், "நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் , சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.



    அடுத்து நடிகர் சிவராஜ்குமார் "மற்றவர்களின் உணர்வுகளை நாம் எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. கன்னட திரையுலகம் சார்பாக நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார்த். இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், அதைக் கண்டு நாங்கள் மிகுந்த மன வருத்தம் அடைகிறோம். இனி இப்படி நடக்காது" என்று கூறினார்.

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "'ஜெயிலர்'படத்தில் கிளப்பிய Mass-ஐ விட,நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு !!!!

    எதற்கு?மனதில் உள்ளதை தில் உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள். நீண்ட(கால)காவேரி பிரச்சனையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு,ஒரு கலைஞனை காயப் படுத்தி ஆவதென்ன?

    அவர்கள் …. எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட,அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த திரு ராஜ்குமார் அவர்களின் வம்சாவழியும், அவர்கள் பெரிதும் நேசிக்கும் திரு சி.ரா.கு எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது, அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது) திருந்த வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


    • "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று தொடர் வலியுறுத்தல்.
    • ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

    இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா பெயருக்கு மாற்றாக "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக தேசிய அரசியலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலத்தரப்பட்டோரும் இது குறித்த தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    இந்த விவகாரம் குறித்து, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில், "இந்தியாவின் கருத்துக்கணிப்பு - ஆடைகளை மாற்றிக் கொள்ளும் கோமாளி, தேர்தல் நாடகத்திற்காக நாட்டின் பெயரையும் மாற்ற நினைப்பவரின் பெயரை குறிப்பிடுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டின் பெயரை மாற்றும் விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    • தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கில்லி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கில்லி'. இப்படத்தில் திரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் 'முத்து பாண்டி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவர் பேசிய 'ஹாய் செல்லம்' என்ற டயலாக் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

    இந்நிலையில், 'கில்லி' பிரகாஷ் ராஜின் பிட்டு என்னுடையதுதான் என்று சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, முதன் முதலில் செல்லம்னு சினிமாவில் நான்தான் பயன்படுத்தினேன். பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலுவை இயக்கும் போது, செல்லம் இங்க வாடி..போடி.. என்றுதான் நானும் அவரும் பேசிக் கொள்வோம். அது அப்படியே பரவியிருச்சு. அது பரவும்போது கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும்போது சேர்த்து வெச்சிட்டாங்க.. அது நான் போட்டதுதான். என் பிட்டுதான் என்று பேசினார்.

    • தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படவில்லை.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய திரைத் துறை சார்ந்தவர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.

    இதில் தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்தி வருகின்றனர். இந்த முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படாததற்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

     

    அந்த வகையில், நடிகர் சூர்யா, மணிகண்டன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு, நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் என பலதரப்பட்டோர் கூறி வந்தனர்.

    தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்காதது குறித்து ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் ஏமாற்றம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து காட்டாமாக கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் பதிவில், "காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போர், பாபாசாஹேப் இயற்றிய சட்டத்தை மாற்ற நினைப்பவர்கள் எப்படி ஜெய் பீம்-ஐ கொண்டாடுவார்கள்," என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்து இருக்கிறார்.

    • இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • பாரம்பரிய பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தவும் தடையில்லை.

    கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வரும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

    கொடைக்கானல் பகுதியில் கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கியது ஏன்? சுமார் 25 நாட்களுக்கு மேலாக ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்த அனுமதி வழங்கியது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

    இதுகுறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா தெரிவிக்கையில், "குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோரது இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என தாசில்தாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்கள் அளவீடு செய்யப்படும். இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    இது குறித்து வில்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தெரிவிக்கையில், "கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் கட்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. எனவே விதி மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்தும், கனரக வாகனங்கள் பயன்படுத்தியது குறித்தும் அவர்கள் 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் பிரகாஷ் ராஜ் பெயரில் 7 ஏக்கர் பட்டா நிலத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், குறிப்பிட்ட இடத்தில் உள்ள பாரம்பரிய பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தவும் தடையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×