புதிய படத்தில் இணைவார்களா!... சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் சந்திப்பு

பா.ரஞ்சித் தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார். கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார்.
புதிய படத்தில் இணைவார்களா!... சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் சந்திப்பு
Published on

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா.ரஞ்சித் கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின்மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார். ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தனது படங்களில் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசிவரும் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வருகிறார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் -இயக்குநர் பா.ரஞ்சித் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதனையடுத்து இருவரும் அடுத்த படத்தில் ஒன்றாக இணைவார்களா என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com