search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "neelam production"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.
    • நீலம் புரொடக்ஷன் பெயரில் படம் தயாரிக்கும் பா.ரஞ்சித், சில தனித்துவமான மற்றும் வெற்றிகரமான படங்களை தயாரித்துள்ளார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    'புளூஸ்டார்' பட வெற்றிக்குப் பிறகு இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் அகிரண்மோசஸ் இயக்குகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

    படத்தில் மலையாள நடிகர் ஸ்ரீநாத்பாசியும் நடிக்கிறார். நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.


    'ஒரு புதிய அத்தியாயத்திற்கான ஆரம்பம். எங்கள் அடுத்த தயாரிப்பிற்கான படப்பிடிப்பு இன்று பிரகாசமான புன்னகை மற்றும் இனிமையான நினைவுகளுடன் தொடங்குகிறது என்று தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு தரப்பு இன்னும் அறிவிக்கவில்லை.

    நீலம் புரொடக்ஷன் பெயரில் படம் தயாரிக்கும் பா.ரஞ்சித், சில தனித்துவமான மற்றும் வெற்றிகரமான படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன் நடித்த ப்ளூ ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் பா.இரஞ்சித் பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர்.
    • இவர் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரிக்கிறார்.

    2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

    இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். இவர் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சமூக அக்கறைக் கொண்ட பல கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.


    இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் மலக்குழி மரணங்கள் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்! இக் கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்க்கும் கடும் கண்டனங்கள்!!! மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்! தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு!!!" என்று பதிவிட்டுள்ளார்.


    ×