என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்கர் விருது"

    • டிஸ்னியின் 'ஜூடோபியா 2', 'கே-பாப் டிமான் ஹண்டர்ஸ்', ஜப்பானின் 'டிமான் ஸ்லேயர்' மற்றும் 'ஸ்கார்லெட்' உள்ளிட்ட படங்களுடன் போட்டியிடுகிறது.
    • ஹாலிவுட் அதிரடி படங்கள் மற்றும் ஜப்பானிய அனிமே தொடர்கள் சிறு வயதிலிருந்தே தன் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அஷ்வின் குமார் தெரிவித்திருந்தார்.

    2026 மார்ச் 15 இல் நடைபெற உள்ள 98வது ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான போட்டியில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் தகுதி பெற்ற படங்களில் 'மகாவதார் நரசிம்மா' இடம்பிடித்துள்ளது.

    டிஸ்னியின் 'ஜூடோபியா 2', 'கே-பாப் டிமான் ஹண்டர்ஸ்', ஜப்பானின் 'டிமான் ஸ்லேயர்' மற்றும் 'ஸ்கார்லெட்' உள்ளிட்ட அனிமேஷன் படங்களுடன் 'மகாவதார் நரசிம்மா' போட்டியிடுகிறது.

    இந்தியில் அறிமுக இயக்குனர் அஷ்வின் குமார் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான 'மகாவதார் நரசிம்மா' படம் யாரும் எதிர்பாராத வகையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டது.

    ஹாலிவுட் அதிரடி படங்கள் மற்றும் ஜப்பானிய அனிமே தொடர்கள் சிறு வயதிலிருந்தே தன் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அஷ்வின் குமார் தெரிவித்திருந்தார்.

    முன்னதாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு அவர் அளித்த பேட்டியில், "டெர்மினேட்டர், ஜுராசிக் பார்க், அவதார் போன்ற ஹாலிவுட் படங்களும், மகாபாரதம் போன்ற நமது காவியங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. 

    அந்த உத்வேகத்துடன், சர்வதேச அளவில் ஒரு இந்தியக் கதையைச் சொல்ல விரும்பினேன். நான் அனிமேஷின் பெரிய ரசிகன். இந்தப் படம் எனது குழந்தைப் பருவ நினைவுகள் மற்றும் நான் பார்த்த படங்களின் பாதிப்பில் உருவானது" என்றார்.  இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. 

    • பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருந்தார்.
    • ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. .

    பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது 'மிஷன்: இம்பாஸிபிள்' திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    பல்வேறு சாதனைனகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் க்ரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்தது.

    இந்நிலையில், டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது. அவருடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

    • இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாதிரத்தில் நடித்துள்ளனர்.
    • நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.

    ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை குழு 2026 ஆஸ்காரின் சிறந்த சர்வதேச படம் விருதுக்கு ஹோம்பவுண்ட் (Homebound) படத்தை பரிந்துரை செய்துள்ளது.

    இது தொட்பாக கொல்கத்தாவில், தேர்வுக்குழு கமிட்டி என். சந்திரா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-

    பல்வேறு மொழிகளின் 24 படங்கள், பரிந்துரைக்கு பரிசீலிக்கப்பட்டன. இது மிகவும் கடினமான தேர்வு. இந்த படங்கள் மக்களின் வாழ்க்கையை தொட்டவை. நாங்கள் தேர்வாளர்கள் கிடையாது. பயிற்சியாளர்கள். முத்திரை பதிக்கும் வீரர்கள் நாங்கள் தேடுகிறோம்.

    இவ்வாறு என். சந்திரா தெரிவித்தார்.

    தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள் என 12 பேர் கொண்ட குழு ஹோம்பவுண்ட் படத்தை துர்வு செய்துள்ளது.

    இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாதிரத்தில் நடித்துள்ளனர். நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.

    வட இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பால்ய நண்பர்கள், காவல்துறை அதிகாரிகளாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அந்த வேலை தங்களுக்கு ஒருபோதும் கிடைக்காத மரியாதையைக் கொண்டு வரும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் இலக்கை நெருங்கும்போது, அழுத்தமும் போராட்டங்களும் அவர்களின் நட்பில் சிக்கல்களை உருவாக்குகின்றன. இதுதான் படத்தின் கதைக்களம் ஆகும்.

    • ஆர்டினரி பீப்பிள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.
    • ரெட்போர்ட் ஒரு அர்ப்பணிப்புள்ள சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார்.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான ராபர்ட் ரெட்போர்டு (89). இவர் 1981-ம் ஆண்டு ஆர்டினரி பீப்பிள் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

    மேலும், இவர் சுற்றுச்சூழல் ஆர்வலருமாக இருந்து வந்தார். இவரது இறப்பை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ராபர்ட் ரெட்போர்ட் செப்டம்பர் 16, 2025 அன்று உட்டா மலைகளில் உள்ள சன்டான்ஸில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவர் நேசித்த இடம், அவர் நேசித்தவர்களால் சூழப்பட்டது. அவரை மிகவும் மிஸ் செய்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திரைப்படத் தயாரிப்புக் கலையின் மீதான அவரது ஆர்வம் ஒரு லாப நோக்கற்ற நிறுவனமான சன்டான்ஸ் நிறுவனத்தை உருவாக்க வழிவகுத்தது.

    ரெட்போர்ட் ஒரு அர்ப்பணிப்புள்ள சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். உட்டாவுக்குச் சென்று மாநிலத்தின் இயற்கை நிலப்பரப்பையும் அமெரிக்க மேற்குப் பகுதியையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம்
    • கமல்ஹாசன் இந்திய மற்றும் உலக சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

    திரைத்துறையின் உச்சபட்ச அமைப்பாக ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைய நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்கர் அகாடமியில் வாக்களிக்கும் உறுப்பினராக சேரவுள்ளது குறித்து பதிவிட்ட கமல்ஹாசன், "இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கானது. என்னை செதுக்கிய எண்ணிலடங்கா கதைசொல்லிகளுக்கானது. இந்திய சினிமா இவ்வுலகிற்கு நிறைய வழங்க உள்ளது" என்று தெரிவித்தார்.

    ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக இணையவுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம்.

    சினிமாவின் ஒவ்வொரு அங்கத்திலும் அவர் செலுத்திய ஆதிக்கம், பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவர் உண்மையிலேயே கலையின் வித்தகர். மேலும் பல ஆண்டுகள் உலக சினிமாவுக்கு அவர் சேவையாற்ற மனதார வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    திரைத்துறையின் உச்சபட்ச அமைப்பாக ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைய நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 26 அன்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய பட்டியலில், கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா மட்டுமின்றி, இந்தியாவைச் சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் கரண் மல்லி, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், காஸ்டியூம் டிசைனர் மாக்சிமா பாசு, ஆவணப்படத் தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பாயல் கபாடியா ஆகியோரும் அடங்குவர்.

    டேவ் பாட்டிஸ்டா, அரியானா கிராண்டே, செபாஸ்டியன் ஸ்டான், ஜேசன் மோமோவா, ஆப்ரி பிளாசா, கில்லியன் ஆண்டர்சன், ஜெர்மி ஸ்ட்ராங் போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் உறுப்பினராக சம்மதித்தாள், அகாடமியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும், வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆகவும் உயரும். கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். 

     அகாடமியில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்கள் இல்லை. மாறாக, வேட்பாளர்கள் அகாடமியின் இரண்டு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

    2025 ஆம் ஆண்டிற்கான இந்த புதிய உறுப்பினர்களில் 41% பெண்கள், 45% பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    2026 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற உள்ளது. பரிந்துரைக்கான வாக்களிப்பு ஜனவரி 12 முதல் ஜனவரி 16 வரை நடக்கும். ஜனவரி 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் அறிவிக்கப்படும். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் கொனான் ஓ'பிரையன் ஆஸ்கர் விருதை தொகுத்து வழங்கவுள்ளார்.

    • பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருந்தார்.
    • ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடைபெறவுள்ளது.

    பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது 'மிஷன்: இம்பாஸிபிள்' திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியான இப்படம் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி வசூல் குவித்து வருகிறது. இதனை தொடர்ந்து 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' பட சண்டை காட்சிக்காக நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையாளராகி உள்ளார். இப்படத்தில் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருந்தார்.

    இந்த நிலையில், பல்வேறு சாதனைனகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் க்ரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

    டாம் குரூஸுடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடைபெறவுள்ளது. கவர்னர்ஸ் விருது என்று அழைக்கப்படும் இந்த ஆஸ்கர் விருதானது 35 வருடங்களுக்கு பிறகு டாம் குரூஸுக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது. 

    • 95வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வரும் ஜனவரி 24-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
    • சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஜூனியர் என்டிஆர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக சர்வதேச பத்திரிக்கை ஒன்று புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.

    டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது. மேலும் 28வது விமர்சகர்களின் சாய்ஸ் விருதுகளையும் வென்றது.

    இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வரும் ஜனவரி 24-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சிறந்த ஒரிஜினல் பாடல் உள்ளிட்ட பல பிரிவுகளில் இடம்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தற்போது சர்வதேச பத்திரிக்கை ஒன்று புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.

    யுஎஸ்ஏ டுடே இணையதளம் ஜூனியர் என்டிஆரை சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கான வலுவான போட்டியாளர்களில் ஒருவராக பெயரிட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ள 10 நடிகர்களின் பட்டியலை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜூனியர் என்டிஆர் பெயர் முதல் வரிசையில் உள்ளது. டாம் குரூஸ், மியா கோத், பால் மெஸ்கல், பால் டேனோ, ஜோ கிராவிட்ஸ் ஆகிய நடிகர்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆர், எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கொமரம்பீமாக நடித்தவர். 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரையைப் பெறுவதற்கான சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கீரவாணி இசையில் சந்திரபோஸ் வரிகளில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
    • 2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய்ஹோ" சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது.

    அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் ஆஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.

    சிறந்த திரைக்கதைக்கான (Writing (Original Screenplay)) ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் 'எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்' (Everything Everywhere All at Once) திரைப்படத்திற்காக எழுத்தாளர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர்.

    சிறந்த பாடல் பிரிவில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. கீரவாணி இசையில் சந்திரபோஸ் வரிகளில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய்ஹோ" சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது.

    • சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan பெற்றார்.
    • சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee Curtis பெற்றார்.

    அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் 'Everything Everywhere All at Once' திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

    சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படம் வென்றது.

    சிறந்த நடிகைக்கான விருது மிஷெல் யோ வென்றார். ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண் இவர் என்ற என்ற சாதனையையும் படைத்தார்.

    சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan பெற்றார்.

    சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee Curtis பெற்றார்.

    சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக இயக்குனர்கள் டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) வென்றனர்.

    சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக பால் ரோஜர்ஸ் வென்றார்.

    சிறந்த திரைக்கதைக்கான விருதையும் 'Everything Everywhere All At Once' திரைப்படம் வென்றுள்ளது.



    • அனைத்து விருதுக்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் தகுதியானது.
    • ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது 'நாட்டு நாட்டு' பாடல்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' (The Elephant Whisperers) என்ற ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    மேலும் சிறந்த பாடலுக்கான விருதை 'நாட்டு நாட்டு' பாடலும் வென்றுள்ளது.

    இவ்விருதுகளை பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது 'நாட்டு நாட்டு' பாடல். இந்த மகத்தான சாதனையை படைத்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

    மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில், முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆஸ்கர் வென்றதற்கு வாழ்த்து. முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என்று கூறியுள்ளார்.

    • தெலுங்கு பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடல் 4.35 நிமிடங்கள் ஓடக்கூடியது.
    • 4 நிமிடமும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சிறப்பாக ஆடியது உலகையே கவர்ந்துள்ளது.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    சினிமா கலைஞர்களுக்கு எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆஸ்கர் விருது பெறுவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள்.

    ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று பங்கேற்பதையும் சினிமா கலைஞர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். இதனால் ஆஸ்கர் விருது பெறுவது சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டு சினிமா கலைஞர்களுக்கும் மிகப்பெரிய கனவாக உள்ளது.

    இந்த ஆண்டு 95-வது ஆண்டாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் நடந்த இந்த கோலாகல விழாவில் உலகின் பல்வேறு நாட்டு சினிமா கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

    இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர், ஆல்தட், பிரீத்ஸ், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆகிய 3 படங்கள் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் மூலப்பாடல் வகையில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

    ஆல்தட் பிரீத்ஸ், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆகிய 2 படங்களும் ஆவண குறும்படங்கள் வரிசையில் இடம்பெற்று இருந்தன. ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் இத்தனை படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

    இந்த தடவை 'நாட்டு நாட்டு' பாடலுக்கு எப்படியும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது. இந்த பாடல் உலக அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருந்ததாலும், ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றதாலும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

    'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி (மரகதமணி) பாடகர்கள் ராகுல், கால பைரவா இயக்குனர் ராஜமவுலி ஆகியோர் விழாவில் பார்வையாளர்களாக பங்கேற்றனர். பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவும் வித்தியாசமான உடை அலங்காரத்தில் பங்கேற்றார்.

    விழாவில் ஒவ்வொரு பிரிவாக விருதுகள் அறிவிக்கப்பட்டபோது பலத்த கரகோஷம் நிலவியது. முதலில் குறும்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த படம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த 2 குட்டி யானைகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையேயான பாச பிணைப்பை சித்தரித்து எடுக்கப்பட்டு இருந்தது. கார்திகி இயக்கிய இந்த படம் 39 நிமிடங்கள் ஓடும் வகையில் இருந்தது.

    தமிழில் தயாரிக்கப்பட்ட இந்த படம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் குட்டி யானைகள், ரகு, பொம்மி மற்றும் இந்த யானைகளை பராமரிக்கும் பாகன் பொம்மன், அவர் மனைவி பெல்லி ஆகியோரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. நெட்பிளிக்சில் கடந்த ஆண்டு இந்த படம் வெளியாகி கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

    இந்த படம் ஆஸ்கர் விருதை பெற்றது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. தமிழ் ஆவண குறும்படம் ஒன்றுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் தமிழ் திரை உலகினர், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையடுத்து பாடல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சேர்ந்து ஆடியிருப்பது போன்று கலைஞர்கள் ஆடி ஆஸ்கர் விருது விழா பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தது. அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.

    அதன்பிறகு 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி அதை பெற்றுக்கொண்ட னர். அவர்கள் இருவரும் விழா மேடையில் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்து பேசினார்கள்.

    'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்றிருந்த 'ஜெய்ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அந்த பாடலுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.

    தெலுங்கு பாடலான அந்த பாடல் 4.35 நிமிடங்கள் ஓடக்கூடியது. இந்த 4 நிமிடமும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சிறப்பாக ஆடியது உலகையே கவர்ந்துள்ளது.

    ஆஸ்கர் விழாவில் மற்ற விருதுகள் பெற்ற படங்கள் மற்றும் திரை உலக பிரமுகர்கள் விவரம் வருமாறு:-

    சிறந்த படமாக எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகர் பிரண்டன் பிரேசர், சிறந்த நடிகை மிஷல் இயோ.

    சிறந்த அனிமேஷன் திரைப்படம்-பினோச்சியோ, சிறந்த துணை நடிகர்-கீ ஹ்யூ குவான், சிறந்த துணை நடிகை ஜேமி லீ கர்டிஸ், சிறந்த ஆவணப்படம் நாவல்னி, சிறந்த குறும்படம் ஐரிஷ் குட்பை, சிறந்த ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் பிரண்ட், சிறந்த ஒப்பனை தி வேல், சிறந்த ஆடை வடிவமைப்பு பிளாக் பாந்தர், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டன் பிரண்ட், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் அவதார்-2.

    ×