என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுஷ்மான் குர்ரானா"

    • கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    திரைத்துறையின் உச்சபட்ச அமைப்பாக ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைய நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 26 அன்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய பட்டியலில், கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா மட்டுமின்றி, இந்தியாவைச் சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் கரண் மல்லி, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், காஸ்டியூம் டிசைனர் மாக்சிமா பாசு, ஆவணப்படத் தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பாயல் கபாடியா ஆகியோரும் அடங்குவர்.

    டேவ் பாட்டிஸ்டா, அரியானா கிராண்டே, செபாஸ்டியன் ஸ்டான், ஜேசன் மோமோவா, ஆப்ரி பிளாசா, கில்லியன் ஆண்டர்சன், ஜெர்மி ஸ்ட்ராங் போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் உறுப்பினராக சம்மதித்தாள், அகாடமியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும், வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆகவும் உயரும். கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். 

     அகாடமியில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்கள் இல்லை. மாறாக, வேட்பாளர்கள் அகாடமியின் இரண்டு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

    2025 ஆம் ஆண்டிற்கான இந்த புதிய உறுப்பினர்களில் 41% பெண்கள், 45% பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    2026 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற உள்ளது. பரிந்துரைக்கான வாக்களிப்பு ஜனவரி 12 முதல் ஜனவரி 16 வரை நடக்கும். ஜனவரி 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் அறிவிக்கப்படும். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் கொனான் ஓ'பிரையன் ஆஸ்கர் விருதை தொகுத்து வழங்கவுள்ளார்.

    • இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
    • இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிகிறது. இந்த படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதற்காக அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.

     


    எனினும், தற்போதைய தகவல்களின் படி ஆயுஷ்மான் குர்ரானா கங்குலி வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிக்க இருந்த பாத்திரத்தை வங்காள மொழி நடிகரான பிரசென்ஜித் சாட்டர்ஜீ நடிப்பார் என்று தெரிகிறது.

     


    பிரசென்ஜித் சாட்டர்ஜீ இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியின் நெருங்கிய நண்பர் ஆவார். 61 வயதான சாட்டர்ஜி இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கங்குலி படத்தில் நடிப்பது பற்றி படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக சவுரவ் கங்குலி வாழ்க்கை வரலாற்று படத்தில் பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆயூஷ்மான் குர்ரானா ஆகியோர் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். 

    ×