என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்ட பந்தயம்"

    • உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் ஸ்பீட்
    • ஸ்பீட் ஐஷோஸ்பீட் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

    இன்றைய சமூக வலைத்தள பயன்பாடு என்பது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது. சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் செல்ல முடியாத இடங்கள் குறித்து தெரியாதவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக பலர் யூடிப் சேனல்கள் தொடங்குகின்றனர். இதில் சிலரே மக்கள் மனதில் இடம்பிடித்து நிலைத்து நிற்கின்றனர். அவர்கள் செல்லும் நாடு, ஊர், அனுபவங்கள் குறித்து நேரடியாக ஒளிபரப்பி லைக்குகளை அள்ளுகின்றனர்.

    அந்த வகையில், உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் ஸ்பீட். இவர் ஐஷோஸ்பீட் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உலகளவில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட சேனல்களில் ஒன்றாக ஐஷோஸ்பீட் இருக்கிறது.

    வித்தியாசமான முறையில் வீடியோக்களை போட்டு பிரபலமான ஸ்பீடு தற்போது சிறுத்தையுடன் ஓட்டப்பந்தயம் வைத்து ஓடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் தமிழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • சென்னையில் உள்ள சென்ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் - தீபா தம்பதியரின் மகள் சீதளாதேவி. இவர் சென்னையில் உள்ள சென்ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் தமிழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்து தமிழகத்திற்கு பேருமை சேர்த்த மாணவி சீதளாதேவியை வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    ×