search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public panic"

    • அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூா் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டுமென நோயாளி களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனா்.

    சின்னமனூர் அருகே பூலாநந்தபுரம், சீலைய ம்பட்டி, அப்பிப்பட்டி, வேப்பம்பட்டி, காமாட்சி புரம், எரசை, மாா்க்கை யன்கோட்டை. குச்சனூர், அழகாபுரி. உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறு கின்றன.

    மது அருந்துதல், கஞ்சா விற்பனை, பாலியல் தொழில் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதால் இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

    இதனால் உடனடியாக இந்த அரசு ஆஸ்பத்திரி நுழைவாயில் பகுதி 2 கேட்டிற்கும் காவலாளிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேனி அரசு மருத்துவமனையில் 22 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தனி கவனம் செலுத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி நகரின் முக்கிய பகுதியாக காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு பைக்கில் வைக்கப்பட்டு இருந்த 9 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதே போல் எஸ்.புரம் அருகே பைக்கில் வந்த மர்ம நபர்கள் சாலையோரம் நின்று பேசிக் கொண்டு இருந்த வாலிபரின் செல்போனை பறித்துச் சென்றனர். இதே போல் சக்கம்பட்டி மெயின் ரோடு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அனுமார் கோவில் அருகே துணிகரமாக செல்போனை தூக்கிச் சென்றனர். இதே போல் ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே கடையின் பூட்டை உடைத்து பைக் திருடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துணையாக இருந்த உறவினர்களின் 22 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. பெயரளவுக்கு மட்டும் வழக்கு பதிவு செய்து கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாகி விட்டது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆயுதபூஜை, தீபாவளி என தொடர் பண்டிகைகள் வர உள்ளது. எனவே ஆண்டிபட்டி பகுதியில் மக்கள் கூட்டம் சாலையில் அதிகரிக்கும் எனவே இதில் தனி கவனம் செலுத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிக்கப்பட்டது.
    • தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    மதுரை

    மதுரை விமான நிலையம் அருகே உள்ள சம்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருமணி(வயது34). இவர் அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கொள்ளை கும்பல் திடீரென குருமணியை மறித்து சரமாரியாக தாக்கினர்.

    தொடர்ந்து அவருடைய மோட்டார்சைக்கிள், செல்போனையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம், மண்டேலாநகர் செல்லும் சாலைகளில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்திருக்கும். இதனை பயன்படுத்தி சாலையில் மறைந்திருந்து சமூக விரோதிகள் வாகன ஓட்டிகளையும், அந்த வழியாக நடந்து செல்வோரையும் தாக்கி நகை-பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    குறிப்பாக அவனியாபுரம் ரிங்ரோடு, மண்டேலாநகர், அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோடுகளில் அண்மை காலமாக வழிப்பறி சம்ப வங்கள் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அவனியாபுரம போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. வில்லா புரம் ஹவுசிங்போர்டு, மீனாட்சி நகர், அவனியா புரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்வோரை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    எனவே ேபாலீசார் வழிப்பறி சம்பவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது.
    • இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் சுற்றி உள்ள பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, டாஸ்மார்க் அருகே ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு திட்டக்குடி அருகே அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சிம்ரன் (28), ராஜவேணி (32), பரிமளா (36) ஆகிய 3 பேரும் ஸ்கூட்டியில் ராமநத்தத்தில் இருந்து அரங்கூர் சென்ற போது திட்டக்குடி ராம நத்தம் நெடுஞ்சா லையில் உள்ள பெரங்கியம் அரங்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத, 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டியை ஓட்டி வந்த சிம்ரன் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்தனர்.

    ஆனால் திருட முடியவி ல்லை இந்த வழிப்பறியில் ஸ்கூட்டியில் வந்த 3 பெண்களும் கீழே விழு ந்ததில், ராஜவேணி படுகா யம் அடைந்தார். மற்ற 2 பெண்கள் சிறு காயமும் ஏற்பட்டு ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராஜவேணி மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஒரு வாரத்தில் மட்டும் திட்டக்குடி மற்றும் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் பெண்கள் தனியாக ஸ்கூட்டியில் செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட காவல் துறையினர் விரைந்து இந்த வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்தபோது அந்த 2 ஆசாமிகளும் திடீரென பாலாமணி ஓட்டிச் சென்ற மொபட்டை வழிமறித்தனர்.
    • காங்கயம் போலீஸ் நிலையத்தில் பாலாமணி புகார் செய்தார்.

     காங்கயம்:

    காங்கயம் நகரம், மூர்த்திரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி பாலாமணி (வயது 44). இந்தநிலையில் பாலாமணி நேற்று முன்தினம் மதியம் காடையூர் - கல்லாங்காட்டு புதூர் செல்லும் சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பாலாமணியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 ஆசாமிகள் வந்தனர். கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்தபோது அந்த 2 ஆசாமிகளும் திடீரென பாலாமணி ஓட்டிச் சென்ற மொபட்டை வழிமறித்தனர்.

    பின்னர், பாலாமணியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார்கள். இதுகுறித்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் பாலாமணி புகார் செய்தார்.

    அதன் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காங்கயம் பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

    • கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே ஊடையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் நாய் ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போனது. இந்த நிலையில் ஊடையம் கிராமத்திற்கு சிறுத்தை ஒன்று வந்து காணாமல் போன நாயை கொன்று தின்று விட்டதாகவும், சிறுத்தையை ஈரோடு மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி, கொளந்தபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேரில் பார்த்ததாகவும், தொிவித்தார்.

    எனவே வேலம்பாளையம், முத்தூர், அஞ்சூர், கார்வழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது. மேலும் சமூக வலைத்தளங்களில் சிறுத்தை ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்து இருப்பது போல் தவறாக சித்தரிக்கப்பட்ட படம் ஒன்று வெளியானது.

    இதனால் ஊடையம் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த தாராபுரம் கோட்டம் மற்றும் காங்கயம் துணை கோட்ட வனத்துறை அதிகாரிகள், கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஊடையம் கிராம பகுதிகளில் கரும்புத்தோட்டம், வண்டி தடம் பாதை, மண் சாலை பகுதிகளில் சிறுத்தை நடமாடி, உலாவியதற்கான அறிகுறி ஏதாவது கிடைக்கிறதா என்றும், சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் ஊடையம் சுற்றுவட்டார கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் வனத்துறை அதிகாரிகள் குழுவினர்களுக்கு கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் ஊடையம் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்களிடம் கூறியதாவது:-

    ஊடையம் கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எவ்வித அறிகுறியும் மற்றும் எவ்விதமான தகவலும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் கிராம பொதுமக்கள் உடனடியாக வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது போல் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் குறித்து கிராம பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். வீண் வதந்திகளை உண்மை என நம்பி பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. இருப்பினும் இப்பகுதி கிராம பொதுமக்கள் அனைவரும் பகல், இரவு நேரங்களில் எச்சரிக்கையாகவும், மிகுந்த பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • அருப்புக்கோட்டை பகுதியில் அதிகரிக்கும் கொள்ளை-வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக வழக்கத்தை விட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமூக விரோதிகள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளை, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்றவற்றில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களில் அருப்புக்கோட்டை பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, பழக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல் அஜித் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் பாலமுருகன் (29). மளிகை கடை நடத்தி வரும் இவரது ரூ. 1 அரை லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து அருப்புக்கோட்டை டவுன் மற்றும் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் சரண்யா என்பவரது பழக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று அருப்புக்கோட்டை பகுதிகளில் நாள்தோறும் கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்தில் இறங்கி சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    வீட்டின் பின்புறம் கதவு உடைந்து இருந்தது. வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்க ப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது

    கடலூர்:

    கடலூர் அருகே கோண்டூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புறம் கதவு உடைந்து இருந்தது. இதனை பார்த்து வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்க ப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது   இதனை தொடர்ந்து வீட்டின் அருகாமையில் டீக்கடை ஒன்று உள்ளது. டீக்கடையில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 15 ஆயிரம் பணம் மற்றும் மிக்சியை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இதன் அருகாமையில் மளிகை கடை ஒன்று உள்ளது. மளிகை கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் அங்கு இருந்த 10 ஆயிரம் ரொக்க பணம் திருடி சென்றனர். மேலும் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று இருந்தது.

    அந்த ஜெராக்ஸ் கடையின் ஒருபுறம் பூட்டை உடைத்து, மற்றொருபுறம் இருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்தபோது உடைக்க முடியவில்லை. இதன் காரணமாக மர்ம நபர்கள் அங்கு திருட முடியாமல் தப்பித்து ஓடினர். இந்த நிலையில் இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, பீதியில் காணப்பட்டனர்  இத் தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருடு நடந்த வீடு மற்றும் கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.     இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நள்ளிரவில் 3 கடைகள் மற்றும் வீட்டில் பணம் மற்றும் சைக்கிள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு கோண்டூர் மெயின் ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
    • பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் சுவர் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில், சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்தக் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை.காலியாக உள்ளது. இந்த நிலையில் இந்தக் பழுதடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுமாறும், அல்லது பல்லடம் நகராட்சி இடத்தை ஒப்படைக்க வேண்டும் என பலமுறை தாட்கோ நிர்வாகத்திற்கு நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டும் இன்னும் அவர்கள் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழ காத்திருக்கின்றன. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம சுவர் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த கட்டடத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரும்புத் தகடுகளிலான தடுப்பு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-தாட்கோ கட்டிடம் பழுதடைந்து கடந்த 2014 முதல் செயல்படாமல் உள்ளது. எந்த நேரமும் இடிந்து விழலாம் என்பதால் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டி தாட்கோ நிர்வாகத்திற்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால் நகராட்சிக்கு அந்த இடத்தை ஒப்படைத்தால் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் நிலையம், சுகாதார வளாகம் போன்றவை அமைக்க இடம் தேவைப்படுகிறது என பலமுறை தாட்கோ நிறுவனத்திற்கு கடிதங்கள் வாயிலாகவும், நேரிடையாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் அமைச்சர், மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை அருகே ஊருக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் மணி (55). விவசாயி. இவரது தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு இருந்த 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று சேதப்படுத்தியது.

    பின்னர் அங்கிருந்த சிவக்குமார் வீட்டின் காம்பவுண்டு சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. வீட்டில் சிவக்குமாரும் அவரது மனைவி முத்துவும் தூங்கி கொண்டு இருந்தனர். யானை காம்பவுண்டு சுவரை உடைக்கும் சத்தம் கேட்டு விழித்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். யானை வீட்டிற்குள் நுழைந்து விடும் என்ற அச்சத்தில் இருவரும் சமையல் அறையில் பதுங்கி கொண்டனர்.

    சற்று நேரம் அங்கிருந்த யானை பின்னர் அப்பகுதி செட்டியார் தோட்டத்தில் உள்ள விஜய கோபால் தோட்டத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து பெரிய நாயக்கன் பானையம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மேற்கு தொடர்ச்சி மலை பூச்சியூர் பகுதிக்கு யானையை விரட்டி விட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் விநாயகன், சின்னதம்பி ஆகிய இரு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதில் விநாயகன் யானையை பிடித்து முதுமலையில் விட்டனர். தற்போது ஊருக்குள் புகுந்து இருப்பது மற்றொரு யானையான சின்னதம்பியாக இருக்கலாம் என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதால், அவை திசை மாறி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. வனத்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால், குடியிருப்புக்குள் புகும் வனவிலங்குகளை கண்காணித்து விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

    கோத்தகிரியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் உள்ள காமராஜ் நகர், புதூர், சேலாடா உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி அடித்துக்கொன்று வருவதால், பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் நகரில் ஜெயபால், பாண்டியன், சேக் முகமது, கல்வி ஆகியோரது வீடுகளில் புகுந்து வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி கவ்வி சென்றது. கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தைப்புலி கடித்து காயப்படுத்திவிட்டு சென்றது. நேற்று முன்தினம் இரவு புதூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை அடித்துக்கொன்று, அட்டகாசம் செய்தது.

    முன்னதாக மதிய வேளையில் அளக்கரை செல்லும் வழியில் புதூர் விநாயகர் கோவில் அருகே உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு குடியிருப்புகளுக்கு ஓட்டம் பிடித்தனர். பகலில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் குடியிருப்பு பகுதியிலும் தொடர்ந்து நடமாடி வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறோம். மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    ஜெயங்கொண்டம் வங்குடி ஏரியில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகிலுள்ள வங்குடி கிராமத்தில் சிவன் கோவில் அருகில் உள்ள ஏரியில் நேற்றுமுன் தினம் சிறுவர்கள், மற்றும் பெண்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அருகில் முதலை படுத்திருப்பதை சிறுவர்கள் பார்த்தனர். உடனடியாக அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர்.

    இதனால் வங்குடி கிராமத்திலுள்ள அனைத்து பொது மக்களும் அந்த ஏரியில் குளிக்கச் செல்வதற்கும், துணி துவைப்பதற்கும், கால் நடைகளை குளிப்பாட்டவும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    முதலை கடித்து விடும் என்ற அச்சத்தில் பொது மக்கள் ஏரியில் இறங்காமல் பீதியில் உள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறியுள்ளனர்.

    பொது மக்கள் முதலை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலைப்பண்ணைஅல்லது முதலைகள் வசிக்கும்அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு போய்விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள் வருவாய்துறையினர் தலையிட்டு உடனடியாக இதை செயல் படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×