என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னிமலை"

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு குட்டியின் தோட்டத்தில் பதிந்து இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
    • சிறுத்தையினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன், தெற்கு வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள ஊர் சில்லாங்காட்டுவலசு, இங்குள்ள பாப்பங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அப்புகுட்டி. விவசாயியான இவர் தனது குடும்பத்துடன் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் எருமை மாடுகள், வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.

    நேற்று அதிகாலை பால் கறப்பதற்காக அப்புகுட்டி எருமைகள் கட்டி இருந்த பகுதிக்குச் சென்றார். அங்கு பார்த்த பொழுது பட்டியில் இருந்த ஒரு வெள்ளாடு காணாமல் போயிருந்தது. அதனால், அப்புகுட்டி ஆடு தோட்டத்தில் எங்காவது உள்ளதா? என தேடி பார்த்தார்.

    அப்பொழுது தோட்டத்தை ஒட்டி போடப்பட்டுள்ள கம்பி வேலி வரை அவர் சென்றார். அங்கு கம்பி வேலிக்கான கல் தூணில் அவர் வளர்த்து வந்த ஆட்டின் ரோமங்கள் ஒட்டியிருந்தது. மேலும், அதே பகுதியில் மர்ம விலங்கு ஒன்றின் கால் அடித்தடங்கள் காணப்பட்டது.

    இது குறித்து அவர் சென்னிமலை வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு குட்டியின் தோட்டத்தில் பதிந்து இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என்பதை உறுதி செய்தனர். சிறுத்தை புலி வனப்பகுதியை விட்டு வெளியேறி வெள்ளாட்டை கொன்று கம்பி வேலி வழியாக இழுத்துச் சென்று உள்ளது தெரிய வந்தது.

    கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிலாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி என்பவர் தோட்டத்தில் தொடர்ந்து ஆடுகள் மற்றும் கன்று குட்டிகள் காணாமல் போன நிலையில் அவற்றை சிறுத்தை வேட்டையாடி தூக்கி சென்றதை வனத்துறை உறுதி செய்தது.

    அதை தொடர்ந்து அவரது தோட்டத்தில் சிறுத்தையினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். ஆனால், கூண்டுக்குள் சிக்காமல் தப்பி சென்ற சிறுத்தை தற்போது பாப்பாங்காடு பகுதியில் ஆடுகளை வேட்டையாடி தனது அட்டகாசத்தை தொடங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று ஆட்டை கட்டி போட்டு இலை தலைகளை போட்டு வைத்து கூண்டு வைத்து உள்ளனர்.

    • காலை சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது
    • இன்று காலை சென்னிமலை முருகன் கோவில், திண்டல் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் கடந்த 26-ந் தேதி காலை கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    அன்று காலை சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது.

    பின்னர் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து மகா பூர்ணாகுதியும், பின்னர் உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடைபெற்றது.

    தொடந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து நேற்று மதியம் வரை ஐந்து நாட்களும் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    நேற்று மதியம் மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்திவேல் வாங்கும் வைபோகம் நடந்தது. இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் முருகப்பெருமானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேலினை ஒப்படைத்தார்.

    அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெ ருமான் சமேதராக மலை அடிவாரத்தில் எழுந்தருளி இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹாரவிழா நிகழ்ச்சி தொடங்கியது.

    சென்னிமலை நான்கு ராஜ வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் நிகழ்சியை ஆயிரக்கா ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபத்தியுடன் கண்டுகளித்தனர்.

    இதில் மேற்கு ராஜ வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ராஜ வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ராஜ வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெரு மான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.

    அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் எழுந்தருளினார்.

    இதேபோல் திண்டல் மலை முருகன் கோவிலிலும் நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் நேற்று சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது.

    இன்று காலை சென்னிமலை முருகன் கோவில், திண்டல் முருகன் கோவில்களில் திருக்க ல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புஞ்சை புளியம்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று குதிரை, வீரபாகு சூரன் போன்ற வாகனங்கள் சத்தி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் வழியாக வந்துபவானி சாகர் சாலை வழியாக சென்று கோவிலை அடைந்தது.

    பின்னர் இரவு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை முருகப்பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தி பரவசத்துடன் மேள தாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.
    • சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை 5.45-க்கு நிலை சேர்ந்தது.

    சென்னிமலை

    ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழம் சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தைப்பூச விழா தான் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

    15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கரூர், திருப்பூர், கோவை உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக காவடி, பால், தயிர் சுமந்து வந்து முருகனை வணங்கி செல்வர்.

    பக்தி பரவசத்துடன் மேள தாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.

    இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேரோட்டம் கடந்த 5-ந் தேதி காலை தொடங்கி சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை 5.45-க்கு நிலை சேர்ந்தது. இந்த நிலையில் இன்று இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி நடக்கிறது.

    நாளை இரவு தெப்போற்சவம் பூதவாகனக்காட்சி நடக்கிறது. நாளை மறுநாள் மகாதரிசனம் அன்று காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது.

    அதை தொடர்ந்து இரவு 7.40 மணிக்கு நடராஜ பெருமானும். சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சி இரவு முழுவதும் நடக்கும்.

    இதை காண சென்னிமலை நகரில் லட்சக்க னக்காண பக்தர்கள் கூடுவர். தொடர்ந்து 10-ந் தேதி அதிகாலை 5 மணி வரை சுவாமி திருவீதி நடக்கும். இரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நாளை இரவு நடக்கிறது.
    • இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்வார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகன காட்சி, பஞ்சமூர்த்தி புற ப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, பரி வேட்டை ஆகிய விழாக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தொடர்ந்து இன்று இரவு தெப்போற்சவம், பூச வாகன காட்சி திருவீதி உலா நடக்கிறது. தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) இரவு நடக்கிறது.

    முன்னதாக காலை 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடடர்ந்து மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.

    அப்போது டன் கணக்கில் மலர்களால் அபிஷேகம் செய்யப்படும். இரவு 8 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடக்கும்.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்வார்கள். இரவு 9 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் நான்கு ராஜா வீதிகளிலும் சாமி வலம் வந்து அதிகாலை 5 மணிக்கு கைலாசநாதர் கோவி லுக்குள் சென்றடையும்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தேர் திருவிழா நிறைவுக்கு வருகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன்,மற்றும் பணியாளர்கள், அர்ச்ச கர்கள் செய்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நாளை மாலை 4 மணிக்கு மேல் சென்னிமலை டவுன் பகுதிக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டது.

    ஈரோடு, பெருந்துறை மார்கமாக செல்லும் பஸ் களுக்கு பிராட்டியம்மன் கோவில் அருகில் தற்காலிக பஸ் நிறுத்தமும், அரச்சலூர், கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு அரச்சலூர் ரோட்டிலும், ஊத்துக்குளி மார்க்க பஸ்களுக்கு மேலப்பாளையத்திலும் தற்காலிக பஸ் நிறுத்தமும் அமைக்கப்படுகிறது.

    • பராமிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    • இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது.

    எனவே பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம்,

    காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    இதே போல் சென்னிமலை யூனியன், பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு

    மேலப்பாளையம், பள்ளக்காட்டுபுதூர், தொட்டம்பட்டி, பெரியாண்டிபாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துலுக்கம்பாளையம், வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம்

    உத்திராண்டி பாளையம், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    • காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.
    • இந்த மாதத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து நடந்துள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் உள்ள கணுவாய் அருகே வனப்பகுதியை ஒட்டிய காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீப்பிடித்த பகுதிகளில் தண்ணீரை பீய்சி அடித்தும்,

    தீயணைப்பு வண்டி செல்ல இயலாத பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நடந்து சென்று இலை, தழைகளை பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அந்த பகுதியில் யாரோ பீடி, சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு வீசிய நெருப்பால் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காப்புக்காடு பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து நடந்துள்ளது.

    வனத்துறையினர் இந்த பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்றும், காப்புக்காடு பகுதியில் விழிப்புணர்வு போர்டு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த கால் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பின்னர் பங்குனி தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேரோட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த கால் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது கைலாசநாதர் கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் உள்பட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பங்குனி தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணியளவில் கோவிலின் தலைமை குருக்கள் ராமநாதசிவம் தலைமையில் கைலாசநாதர் கோவிலில் இருந்து சாமியின் வேலுடன் புறப்பட்டு 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பின்னர் மீண்டும் கைலாசநாதர் கோவிலை அடைந்தனர்.

    • பங்குனி உத்திர தேரோட்டம் கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
    • 3 -ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய திருதலங்களில் சென்னிமலை மலை முருகன் கோவில் திகழ்ந்து வருகிறது.

    இங்கு முருகனுக்கு தைப் பூசதேர், பங்குனி உத்திர தேர் என 2 திருத்தேர் உள்ளது. ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது.

    இதையொட்டி இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 3 -ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 4-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

    இதை தொடர்ந்து 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ரதாரோகணக்காட்சியும், தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் தேவஸ்தான மண்டபத்தில் அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பாக அன்னதானம் நடக்கிறது.

    மேலும் அன்று மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 7 – ந் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை உதவி ஆணையாளரும் தக்காருமான அன்னக்கொடி,செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் ரவிக்குமார், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், செய்து வருகின்றனர்.

    • உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
    • காணிக்கையாக ரூ.59 லட்சத்து 58 ஆயிரத்து ௧௯௧ செலுத்தி இருந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடை பெற்றது.

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான ரமணி காந்தன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.59 லட்சத்து 58 ஆயிரத்து 191 ரூபாய் செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 291 கிராமும், வெள்ளி 6 கிலோ 152 கிராமும் காணிக்கையாக இருந்தது.

    உண்டியல் திறப்பில் சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கோபி சரக ஆய்வர் ஹரி மற்றும் நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் எம்.பி.என்.எம்.ஜே பொறியியல் கல்லூரி மாணவர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள், அர்ச்சக ர்கள் ஈடுபட்டனர்.

    • புதியதாக பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பணியினை தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் மலை அடிவார த்தில் பஸ்சில் செல்லும் பக்தர்கள் வரிசையாக நிற்க காத்திருப்பு கூடம் கட்டும் பணியை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்து மலை கோவிலுக்கு பஸ்சில் செல்லும் பக்தர்கள் வரிசையாக நிற்கவும், காத்திருக்கவும் காத்திருப்பு கூடம் மலை அடிவாரத்தில் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக கோவில் நிதி ரூ. 64 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி சென்னி மலை முருகன் கோவில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கிருஷ்ண ண்னுண்ணி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.

    விழாவில் திருப்பூர் 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் எஸ். ஆர்.எஸ்.செல்வம், யூனியன் துணை தலைவர் பன்னீர் செல்வம், பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரபு, நகர செயலாளர் ராமசாமி, கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
    • சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40-வது ஆண்டாக கடந்த 11-–ந் தேதி அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    பிறகு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர். இவர்கள் இரவு மலைமீதுள்ள முருகன் கோவிலை வந்தடைந்தடைவர்.

    மேலும் இன்று காலை 9 மணிக்கு சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, முதல்கால வேள்வி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம், 1008 கலச அபிஷேகம் மற்றும் மழை வேண்டி மகா வருண ஜெப ஹோமம் ஆகியவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும் அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி புறப்பாடும் நடைபெறுகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

    • சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • ஆண்களும், பெண்களும் பய பக்தியுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு விழா கடந்த 10-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இன்று காலை 7 மணிக்கு பால் குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சென்னிமலை நான்கு ரத வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக வலம் வந்து காமாட்சி யம்மன் கோவிலையடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பய பக்தியுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். பால் குடங்கள் கோவிலை அடைந்த பின்பு காமாட்சி யம்மனுக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கி ழமை) மாலை 6 மணிக்கு கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    17-ந் தேதி காமாட்சியம்மன் மாவிளக்கு க்குடன் திருவீதி களில் பவனி வந்து தீபாராதனை நடக்கிறது. 18-ந் தேதி வியாழன் காலை 6 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்று மாலை 3 மணிக்கு மேலப்பாளையம், மாதேஸ்வரநகரில் இருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு திருக்கோவிலை வந்துசேரும்.

    மாலை 4 மணிக்கு களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வ லம் புறப்பட்டு ஜென்டை மேளம் முழங்க கோவிலை வந்தடையும். 19-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர், மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×