search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perundurai area"

    • 150 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
    • இவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

    பெருந்துறை:

    பெருந்துறை நகர் மற்றும் சுற்று பகுதிகளில் குற்ற செயல்களை கண்காணித்து தடுக்கும் பொருட்டும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும்,

    பெருந்துறை போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, பெருந்துறை அமைதி பூங்கா (நவீன எரிமேடை) அறக்க ட்டளையின் சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில்

    பெரு ந்துறை நகர், முக்கியமான சாலைகள், தேசிய நெடு ஞ்சாலை மற்றும் பவானி ரோடு, ஈரோடு ரோடு, ஆர்.எஸ்.ரோடு, சென்னிமலை ரோடு, கோவை ரோடு, குன்னத்தூர் ரோடுகளில் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கும் உள்பட 150 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

    இவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பயன்பாட்டிற்கு வரும்போது குற்ற செயல்களை கண்காணித்து, தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும் பெருந்துறை போலீசாருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    • பராமிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    • இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது.

    எனவே பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம்,

    காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    இதே போல் சென்னிமலை யூனியன், பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு

    மேலப்பாளையம், பள்ளக்காட்டுபுதூர், தொட்டம்பட்டி, பெரியாண்டிபாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துலுக்கம்பாளையம், வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம்

    உத்திராண்டி பாளையம், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    ×