search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் தீ விபத்து"

    • பரமத்திவேலூர் -கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.
    • கடும் வெயில் காரணமாக முளைத்திருந்த புற்கள், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் -கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. அதன் அருகே விவசாயம் செய்யப்படாமல் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்துள்ளது. கடும் வெயில் காரணமாக முளைத்திருந்த புற்கள், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் அந்த செடி, கொடிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியது. அதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்களும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    • ஒட்டன்சத்திரம் பகுதியில் திடீர் தீ விபத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது
    • ஒட்டன்சத்திரம், கொடைக்கானலில் திடீர் தீ விபத்து

    ஒட்டன்சத்திரம் :

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் ஜோயல். சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்த சமயம் எதிர்பாராத விதமாக அவரது வீட்டின் மேற்கூரையில் தீப்பிடித்தது.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. இருந்த ேபாதும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமானது.

    இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற–னர்.

    இதேபோல் கொடை–க்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×