search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SUDDEN FIRE"

    • பொருட்கள் எரிந்து நாசமானது
    • 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் லியோ பிரான்ஸ் ( வயது 58). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார்.

    அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் மர கடை மற்றும் மரப்பட்டறை குடோன் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மரக் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, கடையில் இருந்த பொருட்கள், தீப்பிடித்து எறிந்து கொண்டிருந்தது.

    இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறை மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். சற்று நேரத்தில் கடையில் இருந்த பொருட்களுக்கும் தீ பரவியதால் அந்தப் பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.

    தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் ஆம்பூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

    மேலும் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தால் மர குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

    சம்பவம் நடந்த இடத்தில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாசில்தார் மோகன், இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்புத் துறையினர் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி நியூ டவுன் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வணிக வளாகத்தில் சாதிக் (வயது 47) என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையை சுற்றிலும் உள்ள நிலத்தில் கோரை புல் புதர்கள் முளைத்து அது முழுவதும் காய்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென புதரில் தீ பிடித்து பட்டாசு கடையை சுற்றியுள்ள புல் மள மளவென எரிய தொடங்கி கடை அருகே தீ எரிந்துள்ளது.

    இதை பார்த்த பட்டாசு கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வெளியே இருந்த பட்டாசுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத்து றையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடையை சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து தீ கடையில் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

    இந்த தீ காரணமாக அந்த பகுதியில் இருந்த மின்கம்பங்களில் இருந்த மின்சார ஒயர்கள் தென்னை மரங்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் கருகி நாசமாகின.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாதுர்யமாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதை குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடிகள் முளைந்து காய்ந்திருந்தது. மேலும், ஏரியில் மரங்களும் உள்ளன.
    • மயில், முயல், கால்நடைகள் அங்கிருந்து வெளியேறின.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோடங்குடி கிராமத்தில் பெரிய ஏரி, நடு ஏரி, பழைய ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 144 ஏக்கர் ஆகும். இந்த ஏரியின் நடுவில் கோரைப் புற்கள் மற்றும் பல்வேறு வகையான கொடிகள் முளைந்து காய்ந்திருந்தது. மேலும், ஏரியில் மரங்களும் உள்ளன. இந்நிலையில் நடு ஏரியில் திடீரென நேற்று தீப்பற்றியது. இந்த தீ மளமளவென ஏரி முழுக்க பரவியது. இதில் சீமை கருவேல மரங்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. ஏரியின் அருகில் நிலங்களில் பணி செய்தவர்கள் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினர்.

    தீயினால் ஏற்பட்ட வெப்பம் தாங்க முடியால் ஏரியில் இருந்த மயில், முயல், கால்நடைகள் அங்கிருந்து வெளியேறின. இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் ஏரிக்கு வந்து ஆய்வு செய்தனர். ஏரியில் திடீரென எவ்வாறு தீப்பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுச்சத்திரம் அடுத்த பெருமாள்கோவில்மேட்டில் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • டீ பாய்லர் மற்றும் கியாஸ் சிலிண்டரில் இன்று திடீரென தீப்பிடித்தது.

    நாமக்கல்:

    சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அடுத்த பெருமாள்கோவில்மேட்டில் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள டீ பாய்லர் மற்றும் கியாஸ் சிலிண்டரில் இன்று திடீரென தீப்பிடித்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பேக்கரியில் இருந்து வெளியே ஓடி வந்தனர். கடை ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் துரிதமாக பக்கெட்டுகளில் தண்ணீர் மற்றும் மண்ணை எடுத்து வந்து தீயில் கொட்டி அணைத்தனர். ஊழியர்கள் சாதுர்யமாக செயல்பட்டதால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள் பேக்கரி கடை ஊழியர்களை பாராட்டினர்.

    • சென்னிமலை பகுதியில் வனப்பகுதியில் இது போல தீப்பிடிக்கும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் பலமுறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    • இது போன் சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த காட்டுப் பகுதியில் ஏரா ளமான மரங்கள் மற்றும் புல்வெளிகள் உள்ளன. இதில் சில பகுதிகளில் காய்ந்த புல் மற்றும் செடிகள் உள்ளது. தற்போது வெயி ளின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்தநிலையில் மேலப்பாளையம் காட்டுப்பகுதி யில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீப்பற்றி மற்ற பகுதிகளில் பரவி எரிந்து கொண்டு இருந்தது. இதை கணடு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் உடனடியாக தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்து க்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதே போல் சென்னிமலை- பெருந்துறை ரோடு ஈங்கூர் அருகே காய்ந்த புல்வெளிகள் மற்றும் செடி களில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

    உடனே சென்னி மலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலையத்தினர் தண்ணீரை பீச்சியடித்து தீ மேலும் பரவாமல் அணை த்தனர்.

    இந்த 2 இடங்களிலும் நடந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சிறிது நேரம் தீயை அணைக்கா விட்டால் அருகே உள்ள மரங்களில் தீ பற்றி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

    தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்துக்கு வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது.

    ஒரே நாளில் சென்னி மலை பகுதியில் 2 இட ங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சென்னிமலை பகுதியில் வனப்பகுதியில் இது போல தீப்பிடிக்கும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் பலமுறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தற்போது அதிக அளவில் வெயில் அடிப்பதால் ரோட்டோரம் உள்ள புல்வெளிகள் மரங்கள் காய்ந்து கிடப்பதால் தீ பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் யாராவது தீ பற்ற வைத்து இருக்கலாமா என சந்தேகிக்கப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனப்பகுதியில் கண்காணித்து இது போன் சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • கடையநல்லூர் ரஹ்மானியபுரத்தை சேர்ந்த சுலைமான் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
    • தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ரஹ்மானியபுரம் 9-வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் கடையநல்லூர் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார் .

    அதன் பின்னர் இரவு காலை 11 மணிக்கு ஒர்க் ஷாப்பில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்தது. கார், டிராக்டர் டீசல் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது .

    இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் செங்கோட்டை யில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு துரிதமாக தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள பெட்ரோல் பல்க் மற்ற வேலைக்கு வந்த புதிய டிராக்டர்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது. விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது கார் பேட்டரி ஷாட் மூலம் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
    • சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.

    கடலூர்:

    சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (30), பிரவின் (33), ராஜகோபால் (33), பந்தல்ராஜன் (48), நரேஷ் (37), அணீஷ் (28), சதீப் (42), காந்தி (55) ஆகியோர் சபரிமலைக்கு சென்று திரும்ப வந்து கொண்டிருந்தனர். 

    வரும் வழியில் திட்டக்குடி அடுத்த திருமா ந்துறை சுங்கச் சாவடி அருகில் காலை உணவை சாப்பிட்டனர். பின்னர் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர். திட்டக்குடி-வெங்கனூர் ஆவடி கூட்ரோடு அருகே வரும் போது டெம்போ டிராவலர் வேன் திடிரென தீப்பிடித்தது. உடனடியாக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார். 

    இதைச் சற்றும் எதிர்பாராத அய்யப்ப பக்தர்கள் வேனில் இருந்து வெளியில் குதித்து உயிர் தப்பினர். வேன் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் அப்பகுதியே புகை மூட்டமாக மாறியது. தகவலறிந்து திட்டக்குடி, வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், ராமநத்தம் போலீசார் வேன் தீப்பிடித்த தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மின்கசிவால் குளிர்சாதன பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • ெபரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

    கரூர்

    கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் நேற்று மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டின் உள்பகுதியில் கரும்புகை வந்துள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், ஈஸ்வரனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டினுள் இருந்த குளிர்சாதனை பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் ெபரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

    • திருச்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது
    • திடீரென லாரியின் முன்பக்க டேஸ் போர்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இந்த வெப்ப தாக்குதலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பால்ராஜ் திடுக்கிட்டு எழுந்து கீழே குதித்து உயிர் தப்பினார்

    திருச்சி:

    திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனைய கட்டுமான பணிக்கு மண் நிரப்பும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் ஏராளமான லாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    இதன் அருகிலேயே அரிசி ஆலை பகுதியில் தனியார் ஒருவர் வணிக வளாகம் கட்டுவதற்கு அந்த இடத்தில் மண் போட்டு நிரப்பும் பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

    இதில் சேலம் தம்மம்பட்டி கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இருதயசாமி என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரி மண் நிரப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

    நேற்றைய தினம் வழக்கம்போல் அந்த இடத்தில் தம்மம்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்த லாரி டிரைவர் பால்ராஜ் (வயது 55) மண்ணை கொட்டி விட்டு அங்குள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தினார். பின்னர் இரவு லாரியிலேயே படுத்து தூங்கினார்.

    இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12.45 மணிக்கு திடீரென லாரியின் முன்பக்க டேஸ் போர்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இந்த வெப்ப தாக்குதலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பால்ராஜ் திடுக்கிட்டு எழுந்தார்.

    பின்னர் லாரியில் இருந்து குதித்து வெளியேறி அங்கிருந்த போர்வெல்லில் மோட்டாரை போட்டு பைப் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து அணைக்க முற்பட்டார்.

    ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பகுதியில் காற்று வேகமாக இருந்த காரணத்தினால் தீ மளமளவென பரவியது. இதற்கிடையே அவர் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த நிலைய அலுவலர் மில்க்யூராஜ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருந்தபோதிலும் லாரியின் கேபின் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. லாரியின் பின்பகுதி டீசல் டேங்க்குடன் தப்பியது. டீசல் டேங்கிலும் தீ பிடித்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.

    தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்தா அல்லது சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிறுத்தி வைக்கப்பட்ட லாரி திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×