என் மலர்

    நீங்கள் தேடியது "incident"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண்ணின் கழுத்து சங்கிலியை அறுக்க முயன்றபோது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்
    • தப்பியோடிய மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு

    கரூர்,

    கரூர் வெங்கமேடு சோழன் நகரைச் சேர்ந்தவர் சரவஸ்வதி (வயது 48). ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வெங்கமேடு எஸ்பி காலனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரிடம் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர்களில் ஒருவர், சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த தங்கசெயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, சரஸ்வதி சுதாரித்துக் கொண்டு சத்தம் போடவும், அருகில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து, செயினை பறிக்க முயன்ற அந்த நபரை கையும் களவுமாக பிடித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை ஊரணி பகுதியை சேர்ந்த எட்வின்ராஜ்(வயது 34) என்பது தெரிய வந்ததோடு, அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, உடன் வந்து பைக்கில் தப்பியோடி மற்றொரு நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலையில் ஓடிய ஆசிட்டில் இருந்து எழுந்த புகையால் பெண் மயக்கம்
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை தெளித்து நடவடிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் ஆசீட் அடங்கிய பெரிய குடுவைகளுடன், ஒருவர் சென்று கொண்டிருந்தார். இதில் இருந்து ஒரு குடுவை கீழே விழுந்து உடைந்து உள்ளது. உடையும் பொழுது பெரும் சத்தத்தை ஏற்படுத்த உள்ளது. இதனால் அந்த வாகனத்திற்கு பின்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் இது பற்றி எதுவும் அறியாமல், ஆசிட் ஏற்றி சென்ற இருசக்கர வாகன ஓட்டி சென்று விட்டார். ஆசிட்' தண்ணீர் போல் சாலையில் ஓடியது. மேலும் கொளுத்திய வெயிலுக்கு 'ஆசிட்' பொறிந்து கொண்டிருந்தது. இதனால் மீண்டும் வெடிக்கலாம் என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் கொட்டி கிடந்த 'ஆசிட்' மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சாலையை தூய்மைபடுத்தினர். 'ஆசிட்' வெடிக்கும் போது, அதனருகே யாரும் இல்லாததால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் 'ஆசிட்' கொண்டு சென்றது யார்? அவர் எதற்காக 'ஆசிட்' கொண்டு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வயலுக்கு சென்ற போது சம்பவம்
    • கதண்டு கடித்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டியை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 65) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் வெள்ளைச்சாமி (வயது 40), இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றனர். அப்போது அருகில் உள்ள செடியிலிருந்து கதண்டு வண்டு பறந்து வந்து இருவரையும் கடித்தது. இதில் காயம் அடைந்து மயக்க நிலையில் சென்ற அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பிராங்க்ளின் உட்ரோவில்சன் பணிபுரிந்து வந்தார்.
    • தஞ்சை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பிராங்க்ளின் உட்ரோ வில்சன் பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் தஞ்சையில் போலி மது மற்றும் மதுவிலக்கு சம்பந்தமான குற்ற சம்பவங்களை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரையின் பேரில் சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் பிராங்க்ளின் உட்ரோ வில்சன் தஞ்சை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடையநல்லூர் ரஹ்மானியபுரத்தை சேர்ந்த சுலைமான் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
    • தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ரஹ்மானியபுரம் 9-வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் கடையநல்லூர் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார் .

    அதன் பின்னர் இரவு காலை 11 மணிக்கு ஒர்க் ஷாப்பில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்தது. கார், டிராக்டர் டீசல் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது .

    இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் செங்கோட்டை யில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு துரிதமாக தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள பெட்ரோல் பல்க் மற்ற வேலைக்கு வந்த புதிய டிராக்டர்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது. விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது கார் பேட்டரி ஷாட் மூலம் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், இந்துக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசாவை கண்டித்தும் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    காந்தி ஜெயந்தியை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் திமுக தலைமையிலான அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இந்த ஊர்வல அனுமதியை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.

    மேலும் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறேன்.

    3000 ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுஸ்மிருதி நூலை குறிப்பிட்டு,

    இவ்வாறு மிக மோசமாக பேசி உள்ளார்.

    சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும் என்று யாரும் நிர்பந்தம் செய்யாத போது எதற்காக இதை பேச வேண்டும்?

    மற்ற மதத்தினரின் நூல்களில் உள்ள குறைகளை பற்றி ஆ.ராசா பேசுவாரா?

    தொடர்ச்சியாக இந்து மதத்தை இழிவு படுத்துவோர், மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் முத்து (வயது 38). சம்பவத்தன்று இவர் 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மேலும் வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த அவர்கள் பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் பலாதாரம் செய்த முத்துவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் வசந்தா, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் முத்துவை சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • தியேட்டரில் நடந்த பிரச்சினையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை தாக்குவதற்காக அரிவாள், கத்திகளுடன் காத்திருந்ததும் தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேம்பாலம் ரெயில்வே குட்ஷெட் சாலையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றி திரிவதாக தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் 6 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்த தினேஷ் (வயது 26), மணிகண்டன், சீனிவாசன், மணிகண்டன் உள்பட 6 பேர் என்பதும், தியேட்டரில் நடந்த பிரச்சினையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை தாக்குவதற்காக அரிவாள், கத்திகளுடன் காத்திருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், மணிகண்டன், சீனிவாசன் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து அரிவாள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகன் அறிவழகன் என்பவருடைய வயலுக்கு இன்று காலையில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார்.
    • அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் தெற்கு கோழிய தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (58). விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் திருவிசநல்லூர் காருடையான் தெருவை சேர்ந்த சம்மந்தம் மகன் அறிவழகன் என்பவருடைய வயலுக்கு இன்று 10-ந்தேதி காலையில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார்.

    அப்பொழுதுவயலில் அறுந்து கிடந்த மின்கம்பி யை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தி லேயே கணேசன் பரிதா பமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில் அறிவழ கனின் மனைவி மீனா வயலில் பூச்சி மருந்து அடிக்கப்படுகிறதா என்பதை சென்று பார்த்தபோது கணேசன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசன் உடலை கைப்பற்றி திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருவிடைமருதூர் டி.எஸ்பி ஜாபர் சாதிக் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.

    பலியான கணேசனுக்கு பவானி என்ற மனைவியும், 4மகள்களும் உள்ளனர். 3 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வழிப்பறி சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • நகை பறிப்பு, கொள்ளை தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள், சமூக விரோத கும்பல்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. தனியாக செல்லும் பெண்கள், பூட்டியிருக்கும் வீடுகள் ஆகியவற்றை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர்.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களிடம் மர்ம கும்பல் நகை பறிப்பில் துணிச்சலாக ஈடுபட்டு வருகிறது. விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் நகை பறிப்பு, கொள்ளை தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    நேற்றும்கூட பட்டம்புதூரை சேர்ந்த பலசரக்கு வியாபாரி முருகேசன் என்பவர் தனது மனைவி ஜீவராணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதுஅவரை மறித்த மர்ம நபர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றது. இதுபோன்று விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் ஏராளமானோர் நகை-பணத்தை பறி கொடுத்து போலீஸ் நிலையங்களில் அைலந்து வருகின்றனர்.

    கடந்த மார்ச் மாதம் சாத்தூரில் 54 பவுன் நகை திருடுபோனது. இதுதொடர்பாக சாத்தூர் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

    போலீசாரின் மெத்தன நடவடிக்கையால் சமூக விரோத கும்பல் துணிச்சலாக கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முதியவர்கள், பெண்கள் தனியாக வெளியே செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

    இதுதவிர மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை, ரேசன் அரிசி கடத்தல் போன்றவையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print