search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தர்மபுரி பெண்ணாகரத்தில் மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்
    X

    தர்மபுரி பெண்ணாகரத்தில் மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்

    • மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்இளமுருகு முத்து கடும் கண்டனம்
    • சம்ப வத்தை அரங்கேற்றி யவ ர்களை தண்டிக்காமல் இது நாள் வரை காலம் தள்ளிய கொடுமையும் தான் மீண்டும் இது போன்றதொரு அவல த்தை நாம் காண வழி வகுத்துள்ளது.

    புதுக்கோட்டை

    அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது,

    தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநி லைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இந்த அருவருப்பான, வெட்கக்கேடான, கேவல மான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    புதுக்கோட்டை மாவ ட்டம் வேங்கைவயல் அசி ங்கம் அடங்குமுன்பு அடுத்த அநியாயம் நடந்து ள்ளது.

    இந்த இழிசெயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அல்லது யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வேங்கை வயலில் பட்டி யிலன மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்தை செய்த நபர்களை 300 நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை தமிழக அரசு கண்டு பிடிக்க முடியாததும்,

    அந்த கொடிய சம்ப வத்தை அரங்கேற்றி யவ ர்களை தண்டிக்காமல் இது நாள் வரை காலம் தள்ளிய கொடுமையும் தான் மீண்டும் இது போன்றதொரு அவல த்தை நாம் காண வழி வகுத்துள்ளது.

    இனி இது போன்ற கேவலங்கள், கொடூரங்கள் தொடராமல் இருக்க தமிழக அரசு, வேங்கை வயல் மற்றும் பனைக்குளம் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×