search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்டமங்கலத்தில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது
    X

    வேட்டமங்கலத்தில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது

    • வேட்டமங்கலத்தில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது பொருட்கள் நாசமானது
    • தாய், மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் வேட்டமங்கலத்தில் உள்ள காலனியில் சின்னையன், பாப்பாத்தி, என்ற தம்பதியினருக்கு கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு வீடு வழங்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து போன பிரேம்குமார் குமார் என்பரின் மனைவி பவித்ரா(25) தனது 7 மாத குழந்தையுடன் இந்த வீட்டில் குடியிருந்து இருந்து வந்தார். பவித்ரா குழந்தையுடன் வெளியில் சென்றிருந்த நேரத்தில், தொகுப்பு வீட்டின், மேற்கூரையும் சுவர்களும் இடிந்து விழுந்தது.இதனால் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமாயின. இது குறித்து வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு, பவித்ரா தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் நாட்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர், ஜேசிபி இயந்திரம் வரவழைத்து, இடிந்து விழுது கிடந்த சுவர்களையும், பாதியில் நின்ற சுவர்களையும் அப்புறப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி கூறினர்.

    Next Story
    ×