search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
    X

    குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

    • தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பிராங்க்ளின் உட்ரோவில்சன் பணிபுரிந்து வந்தார்.
    • தஞ்சை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பிராங்க்ளின் உட்ரோ வில்சன் பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் தஞ்சையில் போலி மது மற்றும் மதுவிலக்கு சம்பந்தமான குற்ற சம்பவங்களை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரையின் பேரில் சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் பிராங்க்ளின் உட்ரோ வில்சன் தஞ்சை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    Next Story
    ×