search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawers"

    • ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முழக்கங்கள் எழுப்பிய படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர்.
    • பெண் வழக்கறிஞர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    மணிப்பூரில் மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், அரசியல் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முழக்கங்கள் எழுப்பிய படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர்.

    பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் பி. மோகன், வழக்கறிஞர் முத்துலட்சுமி, வழக்கறிஞர் ரமணி, வழக்கறிஞர் சையது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    பெண் வழக்கறிஞர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக வழக்கறிஞர் கோபிநாத் நன்றி கூறினார்.

    ×