என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன்
- திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளித்த மாணவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்
- அவரை தேடும் பணி தீவிரம்
திருச்சி,
திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஆதி ஹரிஹரசுதன் (வயது15). பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர் களுடன் நேற்று செக் போஸ்ட் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் இறங்கி அனைவரும் குளித்த போது எதிர்பாராத விதமாக ஆதித்ஹ ரிஹரசுதன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலை யத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் ஆதித் ஹரிஹரசுதன் உடலை தேடினர்.உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று 2-வது நாளாக உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Next Story






