search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு கடையை சுற்றி ஏற்பட்ட திடீர் தீயால் பரபரப்பு
    X

    பட்டாசு கடையை சுற்றி ஏற்பட்ட திடீர் தீயால் பரபரப்பு

    • தீயணைப்புத் துறையினர் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி நியூ டவுன் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வணிக வளாகத்தில் சாதிக் (வயது 47) என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையை சுற்றிலும் உள்ள நிலத்தில் கோரை புல் புதர்கள் முளைத்து அது முழுவதும் காய்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென புதரில் தீ பிடித்து பட்டாசு கடையை சுற்றியுள்ள புல் மள மளவென எரிய தொடங்கி கடை அருகே தீ எரிந்துள்ளது.

    இதை பார்த்த பட்டாசு கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வெளியே இருந்த பட்டாசுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத்து றையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடையை சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து தீ கடையில் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

    இந்த தீ காரணமாக அந்த பகுதியில் இருந்த மின்கம்பங்களில் இருந்த மின்சார ஒயர்கள் தென்னை மரங்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் கருகி நாசமாகின.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாதுர்யமாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதை குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×