என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் வீடு தீப்பிடித்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
- ஒட்டன்சத்திரம் பகுதியில் திடீர் தீ விபத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது
- ஒட்டன்சத்திரம், கொடைக்கானலில் திடீர் தீ விபத்து
ஒட்டன்சத்திரம் :
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் ஜோயல். சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்த சமயம் எதிர்பாராத விதமாக அவரது வீட்டின் மேற்கூரையில் தீப்பிடித்தது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. இருந்த ேபாதும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமானது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற–னர்.
இதேபோல் கொடை–க்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்