search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே விவசாய நிலத்தில் திடீர் தீ விபத்து
    X

    பரமத்திவேலூர் அருகே விவசாய நிலத்தில் திடீர் தீ விபத்து

    • பரமத்திவேலூர் -கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.
    • கடும் வெயில் காரணமாக முளைத்திருந்த புற்கள், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் -கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. அதன் அருகே விவசாயம் செய்யப்படாமல் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்துள்ளது. கடும் வெயில் காரணமாக முளைத்திருந்த புற்கள், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் அந்த செடி, கொடிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியது. அதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்களும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    Next Story
    ×