search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அருகே வங்கியில் திடீர் தீ விபத்து பல லட்சம் நகை, பணம் தப்பியது
    X

    தாராபுரம் அருகே வங்கியில் திடீர் தீ விபத்து பல லட்சம் நகை, பணம் தப்பியது

    • குளத்துப்பாளையத்தில் தேசிய மையமாகப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.
    • மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது தெரிய வந்தது.

    தாராபுரம் :

    தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையத்தில் தேசிய மையமாகப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் நேற்று வழக்கு போல் பணியை முடித்து வங்கியை மூடிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வங்கியில் இருந்து கரும்புகள் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வங்கியின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது வங்கியின் மேலாளர் அறையில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தி அணைத்தனர். இருந்த போதிலும் மேலாளர் அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.

    தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பல பல லட்சம் நகை, பணம் தப்பியது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தின போது மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது தெரிய வந்தது.

    Next Story
    ×