search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "construction of"

    • புதியதாக பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பணியினை தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் மலை அடிவார த்தில் பஸ்சில் செல்லும் பக்தர்கள் வரிசையாக நிற்க காத்திருப்பு கூடம் கட்டும் பணியை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்து மலை கோவிலுக்கு பஸ்சில் செல்லும் பக்தர்கள் வரிசையாக நிற்கவும், காத்திருக்கவும் காத்திருப்பு கூடம் மலை அடிவாரத்தில் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக கோவில் நிதி ரூ. 64 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி சென்னி மலை முருகன் கோவில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் காத்திருப்பபு கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கிருஷ்ண ண்னுண்ணி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.

    விழாவில் திருப்பூர் 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் எஸ். ஆர்.எஸ்.செல்வம், யூனியன் துணை தலைவர் பன்னீர் செல்வம், பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரபு, நகர செயலாளர் ராமசாமி, கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணி.
    • தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறை வேற்றும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் பொதுநிதியில் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,

    வெள்ளாள பாளையம் ஊராட்சி, பாரியூர் கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில்,

    அமைச்சர் முத்துசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பாலம் அமைக்கும் பணியினை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் இந்த உயர்மட்ட பாலம் சுமார் 16 மீட்டர் நீளத்திற்கு அமையவுள்ளது. ஓடையின் இருபுறமும் பக்க வாட்டு சுவர் அமைக்கப்படவுள்ளது.

    முன்னதாக கோபிசெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட, பொலவகாளிபாளையம் கால்நடை மருத்துவமனை அருகில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை அமைச்சர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, கோபி செட்டி பாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், செயற்பொ றியாளர் (பவானிசாகர் அணைக்கோ ட்டம்) அருள் அழகன்,

    உதவிசெய ற்பொறியாளர் சதீஷ்குமார், கோபிசெட்டி பாளையம் தாசில்தார் (பொறுப்பு) சிவசங்கர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • மேலும் கற்கள் பெயர்ந்து, புழுதி பறக்கும் மண்சாலையாகவும் மாறி வருகிறது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வெண்டிபாளையம் அருகே மணலி கந்தசாமி வீதி உள்ளது. இந்த வீதி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட தாகும்.

    மணலி கந்தசாமி வீதி வழியாக செல்லும் சாலை ஈரோடு நாமக்கல் மாவட்டம் செல்வதற்கு பிரதான முக்கிய சாலையாகவும், ஈரோடு நாமக்கல் என 2 மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு சாலையாகவும் இருப்பதால் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

    இப்பகுதி வழியே ஈரோடு நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் கல்லூரி வாகனங்கள் தனியார் மற்றும் அரசு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் பொதுமக்கள் நாள்தோறும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் . மேலும் இப்பகுதியில் தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    மேலும் கற்கள் பெயர்ந்து, புழுதி பறக்கும் மண்சாலையாகவும் மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    தார் சாலை அமைக்காததால் மழைக் காலங்களில் சாலையில் ஏற்பட்டிருக்கும் குழிகள், மழை நீரால் நிரம்பி காணப்படுவதுடன், வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான பகுதியில் மழைநீர் நிரம்பி இருப்பதை தெரியாமல் வாகனங்களை இயக்கி பலர் விபத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.

    மணலி கந்தசாமி சாலையை புதுப்பித்து தருமாறு பல ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் இருந்து மணலி கந்தசாமி குடியிருப்பு வரை உள்ள பிரதான சாலையை புதுப்பித்து, தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×