search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agni Nakshatra Festival at"

    • பக்தர்கள் நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
    • சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40-வது ஆண்டாக கடந்த 11-–ந் தேதி அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    பிறகு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர். இவர்கள் இரவு மலைமீதுள்ள முருகன் கோவிலை வந்தடைந்தடைவர்.

    மேலும் இன்று காலை 9 மணிக்கு சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, முதல்கால வேள்வி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம், 1008 கலச அபிஷேகம் மற்றும் மழை வேண்டி மகா வருண ஜெப ஹோமம் ஆகியவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும் அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி புறப்பாடும் நடைபெறுகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

    ×