என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysuru"

    • இரவு நேரங்களில் மழை பெய்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
    • பலத்த காற்றுடன் பெய்யும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் ஆங்காங்கே சாலைகளில் சாய்ந்து விழுகின்றன.

    மைசூரு:

    மைசூரு டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவில் மழையும், பகலில் வெயிலும் அடித்து வருகிறது. கடந்த 19-ந்தேதி இரவு கனமழை பெய்தது. சில இடங்களில் இடி- மின்னலுடன் மழை பெய்தது. இதனால், சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மைசூருவில் மழை காரணமாக கடந்த 3 நாட்களாக சாலையோர வியாபாரிகள் அவதி அடைந்தனர். அதாவது இரவு 7 மணி முதல் 9 மணி வரை மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் கடைகளை மூடிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் மழை பெய்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

    காரணம் பலத்த காற்றுடன் பெய்யும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் ஆங்காங்கே சாலைகளில் சாய்ந்து விழுகின்றன. ஆனால், கிராமப்புற பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், அவர்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். அதாவது டிராக்டர் மூலம் நிலங்களை உழுது விதைகளை விதைத்து வருகிறார்கள். இந்த ஆண்டு மைசூரு மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்ததால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. எனவே மைசூருவில் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • தொரப்பள்ளி பஜாரில் உலா வந்த காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி, முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில், மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி பஜார் அமைந்து உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். பொதுவாக இந்த சாலையில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    இதன்காரணமாக ஊட்டிக்கு தாமதமாக வரும் சுற்றுலா பயணிகள் தொரப்பள்ளி பஜாரில் வாகனங்களை நிறுத்தி மறுநாள் காலை 6 மணி வரை காத்திருந்து பின்னர் புறப்பட்டு செல்வார்கள். மேலும் கனரக வாகன டிரைவர்கள் தொரப்பள்ளியில் வண்டியை நிறுத்திவிட்டு வாகனத்தில் படுத்து தூங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை நேற்று இரவு தொரப்பள்ளி பஜாருக்கு வந்தது. பின்னர் அந்த யானை அங்கு நின்றிருந்த வாகனங்களில், சாப்பிட எதாவது உள்ளதா என தேடிப்பார்த்தது.

    இதற்கிடையே தொரப்பள்ளி பஜாரில் யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொரப்பள்ளி பஜாரில் உலா வந்த காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.

    • ரேவண்ணாவின் உதவியாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து மீட்பு.
    • புகாரில் முதல் குற்றவாளியாக ரேவண்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.

    ரேவண்ணா வழக்கில், மைசூருவில் காணாமல் போன பெண்ணை காலேனஹல்லி கிராமத்தில் ரேவண்ணாவின் உதவியாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து சிறப்பு புலனாய்வு குழு மீட்டுள்ளனர்.

    கடந்த 29ம் தேதியில் இருந்து தனது தாயை காணவில்லை என்று மைசூரை சேர்ந்த நபர் புகார் அளித்திருந்தார்

    புகாரில் முதல் குற்றவாளியாக ரேவண்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.

    மீட்கப்பட்ட பெண்ணிடம் பெறப்போகும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் காணாமல் போனாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது தெரியவரும்.

    இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தாயை காணவில்லை என மகன் புகார் அளித்திருந்த நிலையில், புகார் தொடர்பாக ரேவண்ணா முன்ஜாமின் கோரியிருந்தார்.

    இந்நிலையில், ரேவண்ணாவின் முன்ஜாமின் மனுவை பெங்களூரு மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் நிராகரித்தது.

    ஏற்கனவே 2 நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காத நிலையில் ரேவண்ணாவுக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என்ற எஸ்ஐடி வாதத்தை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மீண்டும் நோட்டஈஸ் வழங்க எஸ்ஐடி முடிவு செய்துள்ள நிலையில், அந்த நோட்டீஸ்க்கும் பதில் அளிக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், கடத்தல் வழக்கில் முன்ஜாமின் மனு நிராகரித்த நிலையில், ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மைசூரு வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. #ChennaiBengaluru #ChennaiBengaluruExpress
    மைசூரு:

    தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவுடன் இணைக்கும் வகையில் தினந்தோறும் சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயங்கி வருகிறது.

    சென்னையில் இருந்து செல்லும்போது தடம் எண் 12609 ஆக இருக்கும் இந்த ரெயில் எதிர்திசையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பும்போது தடம் எண் 12610 என்று குறிப்பிடப்படுகிறது.

    சென்னையில் இருந்து தினந்தோறும் பிற்பகல் 1.35 புறப்படும் இந்த ரெயில் ஆறரை மணிநேர பயணத்தில் சுமார் 362 கிலோமீட்டர்களை கடந்து இரவு 8.05 மணியளவில் பெங்களூரு சென்றடைகிறது.

    இந்நிலையில், இந்த ரெயில் சேவையை மைசூரு நகரம் வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனையேற்று, சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மைசூரு வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்படும் 12609 ரெயில் இரவு 11 மணியளவில் மைரூரு வந்தடையும். மைசூருவில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் 12610 ரெயில் பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூருவை கடந்த பின்னர் கென்கேரி, ராமநகரம், சன்னப்பட்னா, மட்டுர், மன்டியா, பாண்டவபுரா ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னையில் இருந்து 477 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மைசூரு நகரை சுமார் ஒன்பதரை மணி நேரத்தில் இனி சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #ChennaiBengaluru #ChennaiBengaluruExpress
     
    ×