search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train extended"

    சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மைசூரு வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. #ChennaiBengaluru #ChennaiBengaluruExpress
    மைசூரு:

    தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவுடன் இணைக்கும் வகையில் தினந்தோறும் சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயங்கி வருகிறது.

    சென்னையில் இருந்து செல்லும்போது தடம் எண் 12609 ஆக இருக்கும் இந்த ரெயில் எதிர்திசையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பும்போது தடம் எண் 12610 என்று குறிப்பிடப்படுகிறது.

    சென்னையில் இருந்து தினந்தோறும் பிற்பகல் 1.35 புறப்படும் இந்த ரெயில் ஆறரை மணிநேர பயணத்தில் சுமார் 362 கிலோமீட்டர்களை கடந்து இரவு 8.05 மணியளவில் பெங்களூரு சென்றடைகிறது.

    இந்நிலையில், இந்த ரெயில் சேவையை மைசூரு நகரம் வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனையேற்று, சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மைசூரு வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்படும் 12609 ரெயில் இரவு 11 மணியளவில் மைரூரு வந்தடையும். மைசூருவில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் 12610 ரெயில் பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூருவை கடந்த பின்னர் கென்கேரி, ராமநகரம், சன்னப்பட்னா, மட்டுர், மன்டியா, பாண்டவபுரா ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னையில் இருந்து 477 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மைசூரு நகரை சுமார் ஒன்பதரை மணி நேரத்தில் இனி சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #ChennaiBengaluru #ChennaiBengaluruExpress
     
    காரைக்குடி-பட்டுக்கோட்டை ரெயில் மதுரை வரை நீட்டிக்கப்படும் என்றும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன் என்றும் செந்தில்நாதன் எம்.பி. கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியை அடுத்த குன்றக்குடியில், குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் லதா, கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மணி மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், முக்கிய பிரமுகர்களுடன் அரசு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. அதனை எம்.பி., கலெக்டர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இந்த விழாவில் செய்தி-மக்கள் தொடர்பு துறை அலுவலர் பாண்டி, திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அசோகன், குன்றக்குடி ஆதீன மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்தபின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த செந்தில்நாதன் எம்.பி. கூறும்போது, காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான ரெயில் வழித்தடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையிலான ரெயில் பயண நேரத்தை மேலும் குறைக்க முயற்சி எடுக்கப்படும். இத்துடன் அந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் முறையிடப்படும். மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும். இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவேன் என்றார். 
    ×