search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி - பட்டுக்கோட்டை ரெயில் மதுரை வரை நீட்டிக்கப்படும் - செந்தில்நாதன் எம்.பி. நம்பிக்கை
    X

    காரைக்குடி - பட்டுக்கோட்டை ரெயில் மதுரை வரை நீட்டிக்கப்படும் - செந்தில்நாதன் எம்.பி. நம்பிக்கை

    காரைக்குடி-பட்டுக்கோட்டை ரெயில் மதுரை வரை நீட்டிக்கப்படும் என்றும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன் என்றும் செந்தில்நாதன் எம்.பி. கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியை அடுத்த குன்றக்குடியில், குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் லதா, கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மணி மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், முக்கிய பிரமுகர்களுடன் அரசு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. அதனை எம்.பி., கலெக்டர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இந்த விழாவில் செய்தி-மக்கள் தொடர்பு துறை அலுவலர் பாண்டி, திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அசோகன், குன்றக்குடி ஆதீன மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்தபின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த செந்தில்நாதன் எம்.பி. கூறும்போது, காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான ரெயில் வழித்தடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையிலான ரெயில் பயண நேரத்தை மேலும் குறைக்க முயற்சி எடுக்கப்படும். இத்துடன் அந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் முறையிடப்படும். மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும். இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவேன் என்றார். 
    Next Story
    ×