search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
    X

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி.

    பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

    • புதுவை வேலைவாய்ப்பு அலுவலகம் வளாகம் முன்பு நடைபெற்றது.
    • சுவர் ஓவிய திறப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி சார்பில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் புதுவை வேலைவாய்ப்பு அலுவலகம் வளாகம் முன்பு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை அரசு கொறடாவும், இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி. ஆறுமுகம் கலந்து கொண்டு சுவர் ஓவிய திறப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ், தட்டாஞ்சாவடி அளவிலான வசந்தம் வண்ணமலர்கள் கூட்டமைப்பு மற்றும் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×