search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடைசெய்யப்பட்ட  பிளாஸ்டிக் தயாரிப்பது, விற்பனை செய்வது தடை மீறிய செயல்: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
    X

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பது, விற்பனை செய்வது தடை மீறிய செயல்: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

    • ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது.
    • எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது. தடையாணையில் குறிப்பிட்டுள்ளபடி பாலி எதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலிஎதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடைகொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், உபயோகிப்பதற்கும், கையாளுவதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நெய்யப்பட்ட பைகள் அல்லது ரபியன் பைகள் என்ற பெயரில் பிளாஸ்டிக் கைப்பைகள், விற்பனையாளர்களிடமும், கடைக்காரர்களிடமும் பூ, உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஜவுளி, முதலியவைகளை விநியோகிக்க உபயோகப்படுகின்றது. இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்பட்டு குப்பையாக மாறிவிடுகிறது. இவ்வாறு குப்பையாக வீசப்பட்ட பிளாஸ்டிக்குகள் ஏரிகள், ஆறுகள், கடல் போன்ற நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்து கின்றன. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரிப்ப தோ, விற்பனை செய்வதோ மற்றும் விநியோகிப்பதோ தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்ற செயலாகும்.

    ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்று வதற்கு, தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட தடை யை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் கைப்பைகளை எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதனை தமிழக அரசு லியுறுத்துகிறது. எனவே உலகம் எதிர்கொ ள்ளும் பெரும் அச்சுறுத்தலை அகற்று வதற்கு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம் என உறுதிமொழி மேற்கொ ள்வதோடு, அதை உறுதியுடன் பின்பற்றுவோம். இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×