search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் நிலையம் முன்பு குடிபோதையில் ரகளை செய்த வடமாநில வாலிபர்
    X

    போலீஸ் நிலையம் முன்பு குடிபோதையில் ரகளை செய்த வடமாநில வாலிபர்

    • தொலைந்த செல்போனை கண்டுபிடித்து தரும்படி ரோட்டில் உருண்டு புரண்டார்
    • கோவில்பாளையம் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

    கோவை,

    கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் போலீசார் பணியில் இருந்தனர்.

    அப்போது 25 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அவர் அங்கு பணியில் இருந்த போலீசா ரிடம் தனது செல்போனை யாரோ பறித்து சென்று விட்டதாக கூறினார்.போலீசார் நீ தற்போது குடி போதையில் இருக்கிறாய். போதை தெளிந்ததும் வா என கூறி வெளியே அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போலீஸ் நிலையம் முன்பு உள்ள ரோட்டில் படுத்து தனது செல்போனை மீட்டு தரும்படி ரகலையில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரப ரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×