search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாதகாப்பட்டியில் பெற்றோர் திட்டியதால் விஷம் குடித்த வாலிபர் சாவு
    X

    தாதகாப்பட்டியில் பெற்றோர் திட்டியதால் விஷம் குடித்த வாலிபர் சாவு

    • சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை பார்க் வீதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 26). இவரை கடந்த 9-ந் தேதி இவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.
    • அதை தொடர்ந்து, குடும்பத்தினர் கிருஷ்ணராஜை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை பார்க் வீதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 26). இவரை கடந்த 9-ந் தேதி இவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கிருஷ்ணராஜ் எலி மருந்து சாப்பிட்டு மயங்கினார்.

    அதை தொடர்ந்து, குடும்பத்தினர் கிருஷ்ணராஜை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×