என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலம்பியா"

    • வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.
    • அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் போதை பொருளை தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

    அமெரிக்காவுக்குள் போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இதற்கிடையே போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கொலம்பியா மீது டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார் என்று குற்றம்சாட்டிய டிரம்ப், அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் போதை பொருளை தடுக்கவில்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அதிபர் பெட்ரோ இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். 

    அண்மையில் மத்திய கரீபியன் கடலில் போதைப்பொருள் ஏற்றிச் செல்வதாக சந்தேகப்படும் கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களை அதிபர் பெட்ரோ விமர்சித்தார்.

    இந்த நிலையில் உலகளாவிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறி கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.

    மேலும் அவரது மனைவி வெரோனிகா கார்சியா,மகன் நிக்கோலஸ் பெர்னாண்டோ பெட்ரோ பர்கோஸ் மற்றும் கொலம்பிய உள்துறை அமைச்சர் அர்மாண்டோ ஆல்பர்டோ பெனடெட்டி ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

     இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும். மேலும் அமெரிக்கர்களுடன் அவர்கள் வர்த்தகம் செய்ய முடியாது.

    அதிபர் பெட்ரோவின் அமெரிக்க விசா கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு ட்ரம்ப்பும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
    • அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக இஸ்ரேல் அரசுக்கு எதிராக பலவேறு நாட்டு தலைவர்கள் பேசினர். குறிப்பாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்தன.

    இந்நிலையில், ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பேசிய கொலம்பியா அதிபர் குஸ்டாவோ, "காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு டொனால்ட் ட்ரம்ப்பும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், கொலம்பியா அதிபர் குஸ்டாவோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தனது விசா ரத்து செய்யப்பட்டது குறித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதற்காக எனது விசா ரத்து செய்யப்பட்டள்ளது. இது அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இனிமேலும் ஐநா சபையின் தலைமையகம் நியூயார்க்கில் இருக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    மற்றொரு பதிவில் டொனால்டு டிரம்பை 'டொனால்டு டக்' என்று கூறி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ கிண்டல் அடித்தார். 

    • யூரிப் இரத்த வெள்ளத்தில் காரின் பானட்டில் கிடப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.
    • அவரது தாயார் டயானா டர்ப், 1990 இல் போதைப்பொருள் மாஃபியா டான் பாப்லோ எஸ்கோபரின் கும்பலால் கடத்தப்பட்டவர்.

    கொலம்பிய செனட்டரும் 2026 அதிபர் தேர்தல் வேட்பாளருமான மிகுவல் யூரிப் (39), சனிக்கிழமை தலைநகர் போகோடாவில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தார்.

    பொது பூங்காவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் பின்னால் இருந்து அவரைச் சுட்டனர்.

    சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. யூரிப் இரத்த வெள்ளத்தில் காரின் பானட்டில் கிடப்பதும், மக்கள் உதவ விரைவதும் தெரிகிறது.

    அவரது கழுத்து அல்லது தலையில் தோட்டா தாக்கியதாகவும், தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்று கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.

    தாக்குதலில் வேறு எவரும் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

    கொலம்பிய அதிபர் அலுவலகம் இந்த வன்முறைத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    முன்னாள் கொலம்பிய அதிபர் அல்வாரோ உரிப்பால் நிறுவப்பட்ட ஜனநாயக மையக் கட்சியைச் சேர்ந்த மிகுவல் யூரிப், நாட்டின் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதி ஆவார்.

    அவரது தாயார் டயானா டர்ப், 1990 இல் போதைப்பொருள் மாஃபியா டான் பாப்லோ எஸ்கோபரின் கும்பலால் கடத்தப்பட்டு, மீட்பு நடவடிக்கையின் போது உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொலம்பியா நீண்ட காலமாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் நாட்டில் நிலவும் அமைதியின்மையை பிரதிபலிக்கிறது. ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, யூரிப்பின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
    • காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியா நாட்டுக்கு சென்றனர்.

    காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

    இதனால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதை இந்தியா ராணுவம் முறியடித்தது. இதற்கிடையே பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு மற்றும் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்க வெளிநாடுகளுக்கு எம்.பிக்கள் கொண்ட 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

    அவர்கள் ஒவ்வொரு நாடாக சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்கள். காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியா நாட்டுக்கு சென்றனர்.

    அப்போது தலைநகர் பொக்கோட்டாவில் சசி தரூர் நிருபர்களிடம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இந்த இரங்கல் என்பது பயங்கரவாதிகளை அனுப்புபவர்களுக்கும், பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளுபவர்களுக்கும் இடையே வேறுபாடு இன்றி உள்ளது என்றார்.

    இதற்கிடையே கொலம்பியா எம்.பிக்களை, சசிதரூர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர்.

    இந்த நிலையில் இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை கொலம்பியா திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக சசிதரூர் கூறும்போது, நாங்கள் கவலை தெரிவித்ததையடுத்து பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்கிறோம் என்று கொலம்பியா துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா தெரிவித்தார்.

    இது நாங்கள் மிகவும் மதிக்கும் ஒன்று. எங்கள் இறையாண்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், இந்திய துணைக் கண்டத்தில் அமைதிக்காகவும் எங்களுடன் கொலம்பியா உறுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் அறிக்கையை கொலம்பியா வெளியிடும்" என்று தெரிவித்தார்.

    • வெனிசுலாவில் வரும் 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

    கராகஸ்:

    தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது எதிர்க்கட்சியினருக்கு கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கிடையே, வரும் 25-ம் தேதி அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக கொலம்பியா, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த 17 பேர் உள்பட சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலா அரசாங்கம் தடை விதித்துள்ளது. தேர்தல் முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் என வெனிசுலா உள்துறை மந்திரி டியோஸ்டாடோ கபெல்லோ தெரிவித்துள்ளார்.

    • ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்
    • டோலிமா பிராந்தியத்தில் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இது ஏடிஸ் மற்றும் ஹேமகோகஸ் வகை கொசுக்களால் பரவும் ஒருவகை வைரஸ் நோய் ஆகும். இதுவரை இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 74 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் அங்குள்ள டோலிமா பிராந்தியத்தில் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டில் இந்த சமயத்தில் பல கொலம்பியர்கள் வெப்பமான பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் அதிகமாக உள்ளன.

    அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கில்லர்மோ அல்போன்சோ ஜராமில்லோ கூறினார். இலவசமாக வழங்கப்படும் இந்த தடுப்பூசியைப் மக்கள் செலுத்திக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

    • இறுதிக்கட்ட விசாரணையின்போது, ஒடோனியல் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்
    • ஒடோனியலை பாப்லோ எஸ்கோபாருடன் மட்டுமே ஒப்பிட முடியும் என கொலம்பிய அதிபர் கருத்து

    கொலம்பியா நாட்டில் போதை மருந்து கடத்தலும், அது தொடர்பான கொலைகளும் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அங்கு இக்குற்றங்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

    அப்படிப்பட்ட ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ உசுகா. இவர் இத்தொழிலில் வடக்கு கொலம்பியாவின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

    அமெரிக்காவிற்குள் கடத்தி வரப்பட்ட பல டன்கள் போதை பொருள் கடத்தலை ஒடோனியல் நிர்வகித்துள்ளார். இதனால் அவரை அமெரிக்கா தேடி வந்தது. ஒடோனியல் தலைக்கு அமெரிக்கா சுமார் ரூ.40 கோடி ($5 மில்லியன்) பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

    ஒடோனியல் தனது எதிரிகளை கொல்ல இரக்கமின்றி உத்தரவிட்டார். மேலும் பலரை சித்ரவதை செய்துள்ளார். ஒருவரை உயிருடன் புதைத்தார். பொது மக்களை பயமுறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    போலீஸ் தாக்குதலில் அவரது சகோதரர் கொல்லப்பட்ட பிறகு, ஒரு நாள் முழுவதும், "வீட்டிலேயே இருங்கள் அல்லது உயிரை இழப்பீர்கள்" என பொதுமக்களுக்கு உத்தரவிட்டு விட்டு காவல்துறையினரை கொல்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்து அவர்களை வேட்டையாடினார்.

    இந்நிலையில், 2021ம் வருடம், நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கொண்ட தேடுதல் வேட்டை ஒன்றில் இறுதியாக அவரது மறைவிடத்தில் இருந்து ஒடோனியல் கைது செய்யப்பட்டார்.

    அதன்பின்னர், கொலம்பியாவில் இருந்து அவரை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டது. கொலம்பியாவுடன், 'நாடு கடத்தல்' நடைமுறைகளை அமெரிக்கா துவங்கியபோது, ஒரு நிபந்தனையாக அவருக்கு ஆயுள் தண்டனையை அமெரிக்க அரசாங்க வக்கீல் கோர வேண்டாம் என்று கொலம்பியா கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

    அதன்பின்னர் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஒடோனியல் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதாகவும், தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஒடோனியல் கூறினார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

    கொலம்பிய அதிபர் இவான் டுக், ஒடோனியலை குறித்து கூறியதாவது:

    ஒடோனியலை, போதைப்பொருள் கடத்தலில் பெரும்புள்ளியாக திகழ்ந்த பாப்லோ எஸ்கோபாருடன் மட்டுமே ஒப்பிட முடியும். அவர் உலகின் மிகவும் ஆபத்தான கடத்தல்காரர் மட்டுமல்ல, பல சமூக தலைவர்களை கொலை செய்தவர். சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளம் பருவத்தினரை துஷ்பிரயோகம் செய்தவர். மேலும், பல காவல்துறையினரை கொன்றவர்.

    இவ்வாறு அதிபர் டுக் தெரிவித்தார்.

    • முன்னணி அழகான நகரங்களின் பட்டியலில் இந்த நாட்டை ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டது
    • நிறமற்ற திரவமான ஸ்கொபோலமைன் பானங்களில் கலந்தால் தெரியாது

    தென் அமெரிக்காவில் பெரும் பகுதியை கொண்ட நாடு, கொலம்பியா (Colombia). இதன் தலைநகரம் பொகோடா.

    அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.

    மெடலின், கார்டகேனா உள்ளிட்ட அழகான நகரங்களையும், இயற்கை எழில் மிகுந்த டேரோனா, சியரா நிவேடா பிரதேசங்களையும் சுற்றி பார்க்க அமெரிக்க மக்கள் அங்கு பல வருடங்களாக சுற்றுலா செல்கின்றனர்.

    கடந்த 2022 செப்டம்பர் மாதம், பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் அழகான நாடுகளின் பட்டியலில்  இந்நாட்டை முன்னணியில் வைத்தது.

    ஆனால், கடந்த சில மாதங்களாக அந்நாட்டிற்கு செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினருக்கு ஆபத்தாக உள்ளது.

    அமெரிக்க மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த டவ் கெர் (50), மெடலின் நகருக்கு 2-மாத சுற்று பயணம் சென்றார். தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த டவ் கெர், திடீரென காணாமல் போனார். அவரை கொலம்பியா காவல்துறை தேடி வந்த நிலையில், கொல்லப்பட்ட அவரது உடல் ஒரு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

    சுமார் $2000 பணத்திற்காக அவர் கொல்லப்பட்டது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    டேட்டிங் செயலி ஒன்றில் அறிமுகமான பெண் ஒருவருடன் சென்ற போது அவரை அப்பெண்ணும் அவரது நண்பரும் பணத்திற்காக கொன்றதாக தெரிய வந்துள்ளது.

    இதே போல் ஜெஃப் ஹுவெட் என்பவர் ஓட்டல் அறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

    கடந்த 2023 அக்டோபர் வரை 32 வெளிநாட்டினர் கொல்லப்பட்டதாகவும், அதில் 12 அமெரிக்கர்கள், 3 இங்கிலாந்து நாட்டவர்கள் என்றும் கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022-ஐ விட 40 சதவீதம் அதிகம்.

    சுற்றுலா பயணிகளுடன் நட்பாக பேசி, அவர்கள் அருந்தும் பானங்களில் "ஸ்கொபோலமைன்" (scopolamaine) எனும் நிறமற்ற போதை மருந்தை கலந்து கொடுத்து, அவர்களை கடத்தி சென்று, உடைமைகளை திருடி, கொலையும் செய்கின்ற கும்பல் அதிகரித்து வருவதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

    அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடும் போது எச்சரிக்கையாக இருக்கவும், எங்கு சென்றாலும் சொந்த நாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்குமாறும், கொள்ளை முயற்சியில் சிக்கி கொள்ள நேரிட்டல் எதிர்க்காமல் இருக்குமாறும், தனது நாட்டிலிருந்து அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரியை நாஜிக்களுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார் கொலம்பியா அதிபர் பெட்ரோ.
    • இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார்.

    பெகோட்டா:

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா நகரிலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

    பெகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தினவிழாவில் பங்கேற்ற அதிபர் பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார். காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.
    • 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.

    லாஸ் வேகாஸ்:

    கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த 'டி' பிரிவு ஆட்டத்தில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. பிரேசில் அணிக்காக வின்சியஸ் 2 கோலும், சவியோ, லுகாஸ் பகுடோ தலா ஒரு கோலும் அடித்தனர். பிரேசில் பெற்ற முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.

    மற்றொரு போட்டியில் கொலம்பியா 3-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது. 2 வெற்றியுடன் அந்த அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.

    • அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • போட்டியின் 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் கோல் அடித்தார்.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில் இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. தொடர்ந்து விளையாடிய இரு அணிகளும் இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

    போட்டியின் 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்து வெற்றி காரணமாக திகழ்ந்தர். முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    முன்னதாக இந்த போட்டியின் 2-வது பாதியில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மைதானத்திலேயே அழுதார். பின்னர் வெளியேறியும் அவரது அழுகையை நிறுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

    இதனையடுத்து பரபரப்பான இறுதி நிமிடங்களை வெளியில் இருந்து பதட்டத்துடன் மெஸ்ஸி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அர்ஜெண்டினா அணி கோல் கம்பத்தை நெருங்கியது. அதனை ஒற்றை காலில் பார்த்துக் கொண்டிருந்த மெஸ்ஸி, கோல் அடித்ததும் சந்தோஷத்தை கொண்டாடினார். நொண்டி கொண்டே சக வீரரை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

    அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதன்மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

    நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சிகாகோ பயர் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர் மியாமி க்ளப் வெற்றி பெற்றது.

    இப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற ஜாம்பவான் மெஸ்ஸியை இன்டர் மியாமி க்ளப் கௌரவித்தது.

    ஆண்டு வாரியாக வென்ற 45 கோப்பைகளின் படங்களை கைகளில் ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ×