என் மலர்
கொலம்பியா
- ஜனநாயக அமைப்பு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
- சீனாவைப்போல, மக்களை அடக்கி சர்வாதிகார அமைப்பை இந்தியாவில் நடத்த முடியாது.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்திய மாணவர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்துறை தலைவர்களுடன் அவர் சந்திப்பு நிகழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் கொலம்பியாவில் உள்ள EIA பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை பாஜகவை கொந்தளிக்க செய்துள்ளது.
நேற்று அங்கு பொறியியல் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா உலகிற்கு வழங்க நிறைய இருக்கிறது. அதில் நான் நம்பிக்கையுடன் உள்ளேன். ஆனால் தற்போது இந்தியாவின் கட்டமைப்பில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியா கவனிக்க வேண்டிய சில அச்சுறுத்தல்கள் உள்ளன.

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் தற்போது இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தியா பல மதங்கள், மரபுகள் மற்றும் மொழிகளைக் கொண்டது. ஜனநாயக அமைப்பே அனைவருக்கும் இடமளிக்கிறது. ஆனால், இப்போது ஜனநாயக அமைப்பு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
சீனா மையப்படுத்தப்பட்ட மற்றும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், இந்தியா பரவலாக்கப்பட்ட, பல மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட சிக்கலான அமைப்பைக் கொண்டது. சீனாவைப்போல, மக்களை அடக்கி சர்வாதிகார அமைப்பை இந்தியாவில் நடத்த முடியாது. நமது நாட்டின் அமைப்பு இதை ஏற்றுக்கொள்ளாது" என்று கூறினார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு எக்ஸ் மூலம் விமர்சித்த பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, "ராகுல் காந்தி மீண்டும் ஒருமுறை பிரச்சாரத் தலைவர் போல வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகத்தைத் தாக்குகிறார். அவர் இந்திய தேசத்துடன் சண்டையிட விரும்புகிறார்" என்று குற்றம் சாட்டினார்.
- ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
- மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்
பகோடா:
தென் அமெரிக்காவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் நாடு கொலம்பியா. உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகளின் 25 சதவீத பகுதி இந்த கொலம்பியாவில் அமைந்துள்ளது. மறுபுறம் அழகிய கடற்கரைகள், மலை பிரதேசங்கள் என எண்ணிலடங்காத இயற்கை அழகை கொலம்பியா தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் இங்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா வந்து மலையேற்றம், படகு சவாரி, பாரா கிளைடிங், அலை சறுக்கு, வனவிலங்கு பார்வை சவாரி என அனுபவிப்பார்கள்.
இந்தநிலையில் அந்நாட்டின் பிரபல மலை பிரதேசமாக அன்டியோகிவாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மலைசிகரமான பெல்லோவில் இடி, மின்னலுடன் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்தநிலையில் பெல்லோவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலை மீது கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டுமானங்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேர் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன. மேலும் மண்ணுக்குள் புதைந்து மாயமானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலச்சரிவில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
- யூரிப் இரத்த வெள்ளத்தில் காரின் பானட்டில் கிடப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.
- அவரது தாயார் டயானா டர்ப், 1990 இல் போதைப்பொருள் மாஃபியா டான் பாப்லோ எஸ்கோபரின் கும்பலால் கடத்தப்பட்டவர்.
கொலம்பிய செனட்டரும் 2026 அதிபர் தேர்தல் வேட்பாளருமான மிகுவல் யூரிப் (39), சனிக்கிழமை தலைநகர் போகோடாவில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தார்.
பொது பூங்காவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் பின்னால் இருந்து அவரைச் சுட்டனர்.
சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. யூரிப் இரத்த வெள்ளத்தில் காரின் பானட்டில் கிடப்பதும், மக்கள் உதவ விரைவதும் தெரிகிறது.
அவரது கழுத்து அல்லது தலையில் தோட்டா தாக்கியதாகவும், தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்று கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.
தாக்குதலில் வேறு எவரும் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
கொலம்பிய அதிபர் அலுவலகம் இந்த வன்முறைத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் கொலம்பிய அதிபர் அல்வாரோ உரிப்பால் நிறுவப்பட்ட ஜனநாயக மையக் கட்சியைச் சேர்ந்த மிகுவல் யூரிப், நாட்டின் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதி ஆவார்.
அவரது தாயார் டயானா டர்ப், 1990 இல் போதைப்பொருள் மாஃபியா டான் பாப்லோ எஸ்கோபரின் கும்பலால் கடத்தப்பட்டு, மீட்பு நடவடிக்கையின் போது உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியா நீண்ட காலமாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் நாட்டில் நிலவும் அமைதியின்மையை பிரதிபலிக்கிறது. ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, யூரிப்பின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
- காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியா நாட்டுக்கு சென்றனர்.
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதை இந்தியா ராணுவம் முறியடித்தது. இதற்கிடையே பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு மற்றும் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்க வெளிநாடுகளுக்கு எம்.பிக்கள் கொண்ட 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது.
அவர்கள் ஒவ்வொரு நாடாக சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்கள். காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியா நாட்டுக்கு சென்றனர்.
அப்போது தலைநகர் பொக்கோட்டாவில் சசி தரூர் நிருபர்களிடம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த இரங்கல் என்பது பயங்கரவாதிகளை அனுப்புபவர்களுக்கும், பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளுபவர்களுக்கும் இடையே வேறுபாடு இன்றி உள்ளது என்றார்.
இதற்கிடையே கொலம்பியா எம்.பிக்களை, சசிதரூர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர்.
இந்த நிலையில் இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை கொலம்பியா திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சசிதரூர் கூறும்போது, நாங்கள் கவலை தெரிவித்ததையடுத்து பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்கிறோம் என்று கொலம்பியா துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா தெரிவித்தார்.
இது நாங்கள் மிகவும் மதிக்கும் ஒன்று. எங்கள் இறையாண்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், இந்திய துணைக் கண்டத்தில் அமைதிக்காகவும் எங்களுடன் கொலம்பியா உறுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் அறிக்கையை கொலம்பியா வெளியிடும்" என்று தெரிவித்தார்.
- ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்
- டோலிமா பிராந்தியத்தில் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இது ஏடிஸ் மற்றும் ஹேமகோகஸ் வகை கொசுக்களால் பரவும் ஒருவகை வைரஸ் நோய் ஆகும். இதுவரை இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 74 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.
மேலும் அங்குள்ள டோலிமா பிராந்தியத்தில் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டில் இந்த சமயத்தில் பல கொலம்பியர்கள் வெப்பமான பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் அதிகமாக உள்ளன.
அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கில்லர்மோ அல்போன்சோ ஜராமில்லோ கூறினார். இலவசமாக வழங்கப்படும் இந்த தடுப்பூசியைப் மக்கள் செலுத்திக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
- கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் டிரம்ப் எச்சரிக்கை.
- 2 ராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதில் கொலம்பியாவைச் சேர்ந்த பலரை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதற்கு கொலம்பிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
இதற்கிடையே அமெரிக்க விமானங்களில் திருப்பி அனுப்பப்படும் குடிமக்களை ஏற்க கொலம்பியா முன்வந்தது. இதனால் மோதல் முடிவுக்கு வந்து இரு நாடுகள் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது.

அமெரிக்காவில் இருந்து கொலம்பிய மக்களை அழைத்து வர 2 ராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது. அந்த விமானங்கள், 200-க்கும் மேற்பட்ட கொலம்பியாவை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு தலைநகர் போகோட்டாவை வந்தடைந்தது.
- கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
- நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதுமுதல் உலக சுகாதர அமைப்பில் இருந்து வெளியேறுவது, உலக நாடுகளுக்கான யுஎன்- எய்ட் நிதியுதவியை நிறுத்துவது உள்ளிட்ட முடிவுகளை அறிவித்தார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை நாடுகடத்துவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. ஆனால் கொலம்பியா அமெரிக்காவின் நாடு கடத்தல் திட்டத்தை நிராகரித்தது. இதனால் கோபம் தலைக்கேறிய டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆனால் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட 2 விமானங்களைத் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால் கொதித்த டிரம்ப், அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியை உயர்த்தி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வரி விதிப்பு ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும், கொலம்பிய நாட்டு அரசு அதிகாரிகள், அவர்களை சார்ந்தோருக்கான விசா ரத்து, கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் அவசரகதியில் டிரம்ப் பிறப்பித்தார்.

இதற்க்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை உயர்த்தி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டார். நீங்கள் எங்களுக்கு செய்வதை, நாங்களும் உங்களுக்கு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கொலம்பிய அதிகாரிகளின் விசா ரத்து, பயணிக்க தடை உள்ளிட்டவை குறித்து பேசிய குஸ்டாவோ பெட்ரோ, நான் ஒன்றும் அமெரிக்கா வர விரும்பவில்லை. அது எனக்கு போர் அடிக்கிறது. நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கொலம்பியா தனது நிலைப்பாட்டில் இருந்து திடீரென யு டர்ன் அடித்து, அமெரிக்காவில் இருந்து அனுப்பட்ட தங்கள் நாட்டு அகதிகளை ஏற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொலம்பியா அரசு, ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு கடத்தும் விமானங்களில் நாட்டிற்கு வரவிருக்கும் சக நாட்டவர்கள் பாதுகாப்பாக திரும்புவதையும், கண்ணியமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் திரும்ப வந்தவர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதன்மூலம் தென் அமெரிக்க நாடான கொலம்பியா தன்னிடம் அடிபணிந்ததை அடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி உயர்வு, விசா ரத்து, பயண தடை ஆகியவற்றை அமெரிக்கா திரும்பப்பெற்றுள்ளது.
பிரேசில் நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

- கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர்.
- தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி உள்ளது.
பொகோடா:
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
குறிப்பாக அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துகளை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனை தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி உள்ளது.
அந்தவகையில் கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற ராணுவ வீரர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இருதரப்பிலும் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். எனவே அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் நிலைமையை சமாளிக்க வெனிசுலா எல்லையோர மாகாணங்களில் ராணுவ அவசர நிலையை அறிவித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார்.
- ஃபாா்க் அமைப்பைச் சோ்ந்தவா்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இஎல்என் அமைப்பினா் படுகொலை செய்து வருகின்றனர்
- அப்பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் தங்கள் வீடுகளை கைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி கொரில்லா ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 80 போ் உயிரிழந்தனர்.
வெனிசுலாவை ஒட்டிய கொலம்பிய எல்லைப் பிரதேசத்தில் உள்ள கேட்டடம்போ பகுதியில் தேசிய விடுதலை ராணுவம் (இஎல்என்), கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை (ஃபாா்க்) ஆகிய இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.
ஃபாா்க் அமைப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு நிராயுதபாணியை செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் ஃபாா்க் அமைப்பைச் சோ்ந்தவா்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இஎல்என் அமைப்பினா் படுகொலை செய்து வருகின்றனர்.

இரு குழுக்களின் வன்முறைக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கியுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாளில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழன் முதல் வன்முறை சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் தங்கள் வீடுகளை கைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். பாதுகாப்பை பலப்படுத்த 5,000க்கும் மேற்பட்ட வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இஎல்என்-னுடன் நடத்திவந்த போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை கொலம்பியா அரசு நிறுத்திவைத்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கோகைன் வர்த்தக தலமாக உள்ள இப்பகுதியில் யார் வர்தகத்தை கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக போட்டி குழுக்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் சண்டையிட்டு வருகின்றன.
- நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
- வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
போகோடா:
கொலம்பியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் 8,000 பேர் பலியாகிவருகின்றனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொலம்பியா நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30க்கும் அதிகமானோர் பயணித்தனர்.
அந்தப் பேருந்து வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேத்தி தான் கைகளில் மறைத்து வைத்திருந்த இ-சிகரெட்டை கொண்டு புகை பிடித்தார்.
- கேத்தி ஜூவினோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நாட்டு மக்களிடமும், சபாநாயகரிடமும் மன்னிப்பு கோரினார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவை சேர்ந்தவர் கேத்தி ஜூவினோ. அந்த நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்றான கிரீன் கட்சியை சேர்ந்தவரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தலைநகர் பகோடாவில் உள்ள அந்த நாட்டின் பாராளுமன்ற அவையில் பொது சுகாதாரம் தொடர்பான மசோதாவுக்கான விவாதம் நடந்தது. விவாதத்தில் கேத்தி ஜூவினோ கலந்து கொண்டிருந்தார். அப்போது கேத்தி தான் கைகளில் மறைத்து வைத்திருந்த இ-சிகரெட்டை கொண்டு புகை பிடித்தார்.
இது அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானநிலையில் சமூக வலைத்ததளத்தில் பதிவிடப்பட்டது. தொடர்ந்து அந்த வீடியோ காட்டுத்தீ போல பரவி ஒரே நாளில் வைரலானது. இதனை தொடர்ந்து கேத்தி ஜூவினோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நாட்டு மக்களிடமும், சபாநாயகரிடமும் மன்னிப்பு கோரினார்.
- 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
- இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது.
லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. அவர்கள் சிறுமிகள்! மனைவிகள் அல்ல! என்ற முழக்கம் அந்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்த மசோதா மீது தற்போது கொலம்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதிக வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை பாராளுமன்றத்தில் வைத்தே அந்நாட்டு எம்.பிக்கள் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இதில் கையெழுத்திட்ட பின்னர் மசோதா சட்டமாக்கப்பட்டும். இதன்மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதை வரவேற்றுப் பேசிய காங்கிரசை சேர்ந்த கிளாரா ஒப்ரிகான், அவர்கள் பாலியல் பொருட்கள் அல்ல, அவர்கள் சிறுமிகள் என்று தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடான ஈராக் பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைக்க தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.






