என் மலர்tooltip icon

    உலகம்

    புலம் பெயர்ந்தவர்களை ராணுவ விமானத்தில் அழைத்து வந்த கொலம்பியா
    X

    புலம் பெயர்ந்தவர்களை ராணுவ விமானத்தில் அழைத்து வந்த கொலம்பியா

    • கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் டிரம்ப் எச்சரிக்கை.
    • 2 ராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது.

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதில் கொலம்பியாவைச் சேர்ந்த பலரை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதற்கு கொலம்பிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

    இதற்கிடையே அமெரிக்க விமானங்களில் திருப்பி அனுப்பப்படும் குடிமக்களை ஏற்க கொலம்பியா முன்வந்தது. இதனால் மோதல் முடிவுக்கு வந்து இரு நாடுகள் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது.


    அமெரிக்காவில் இருந்து கொலம்பிய மக்களை அழைத்து வர 2 ராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது. அந்த விமானங்கள், 200-க்கும் மேற்பட்ட கொலம்பியாவை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு தலைநகர் போகோட்டாவை வந்தடைந்தது.

    Next Story
    ×