search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cremation"

    • முதலமைச்சர் அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
    • இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

    விக்கிரவாண்டி:

    உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த புகழேந்தி எம்.எல்.ஏ. உடல் தகனம் செய்யப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் விழுப்புரம் அறிவாலயத்தில்பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் திண்டிவனம் வழியாக புதுச்சேரி சென்றடைந்தார் . மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் புகழேந்தியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஏராளமான கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை 6 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் அத்தியூர் திருவாதி வந்து புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். காலை 9 மணி அளவில் புகழேந்தியின் சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் அமைச்சர் பொன்முடி தலைமையில் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்.எல்.ஏ. மறைவையொட்டி விக்கிரவாண்டி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பும், இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

    பின்னர் எம்.எல்.ஏ புகழந்தியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

    இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, கவுதம சிகாமணி எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம், துணை சேர்மன் பாலாஜி, குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி,ரவிதுரை, ஜெயபால், முருகன், நகர தலைவர் தண்டபாணி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பிரசாந்த், மாணவரணி யுவராஜ் , சிவா,இளைஞர் அணி கார்த்திக்,ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து அதில் கல்லறையும் கட்டுகிறார்கள்.
    • தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

    சென்னை:

    சென்னையில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக சமீபகாலமாக இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வழக்கமான சென்னையில் உள்ள மயானங்களில் ஒரு உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு 14 ஆண்டுகள் கழித்தே அந்த உடலை தோண்டி எடுத்து அதில் மற்றொரு உடலை மறு அடக்கம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

    மேலும் பலர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து அதில் கல்லறையும் கட்டுகிறார்கள். இதுபோன்ற நடை முறைகளால் இறந்தவர்களின் உடல்களை மயானங்களில் புதைக்க இடப்பற்றாக்குறை உள்ளது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்த முடிவு செய்துள்ளது. ஒரு உடலை தோண்டி எடுத்துவிட்டு மற்றொரு உடலை மறு அடக்கம் செய்வதற்கான நடைமுறையை 14 ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த நடைமுறையை அமல்படுத்திய பிறகு இன்னும் ஒரு வருடம் கழித்து பெரிதாக கட்டப்பட்டு இருக்கும் கல்லறையை சுற்றி கட்டியுள்ள இடங்களை சிறியதாக மாற்றவும் அவர்களின் உறவினர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மயானங்களில் அதிக இடவசதி கிடைக்கும், இறந்தவர்களின் உடல்களை எந்தவித சிரமமும் இல்லாமல் அடக்கம் செய்யலாம் என்று கருதப்படுகிறது.


    இது தொடர்பாக விவாதிக்க தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது வெளிநாடுகளில் உள்ள கல்லறைகளை போல கட்டிடக்கலையுடன் கூடிய கல்லறைகளுக்கு கவுன்சிலர்கள் இடவசதி கோரி வருகின்றனர். ஆனால் சென்னையில் 208 மயானங்கள் உள்ள நிலையில் அதில் பெரும்பாலான மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு இடநெருக்கடி இருப்பதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

    சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மயானங்களில் இடநெருக்கடியை போக்க விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது. இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் மயானத்தில் மறு அடக்கம் செய்வது 14 ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறையும். கேரளா, மும்பை ஆகிய மாநிலங்களில் மயானங்களில் ஒரு வருடத்திலேயே மறு அடக்கம் செய்யப்படுகிறது. அந்த நடைமுறை சென்னையிலும் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன், காண்டிராக்டர். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் மதன்குமார் (29).

    எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுவியல் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் திடீரென மதன்குமார் மாயமானார். சகமாணவர்கள் அவரை தேடிய போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை தீ வைத்து எரித்ததாகவும், பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி கீழே போட்டதில் அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் விழுந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதன்குமார் உடல் விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டியை அடுத்த புதூரில் உள்ள சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் அவரது உடல் இன்று காலை கொண்டு வரப்பட்டது.

    இதையொட்டி அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

    அமைச்சர் அஞ்சலி

    தொடர்ந்து அவரது உடல் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா உள்பட பலர் மதன்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் நாமக்கல் மின் மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே மகன் சாவுக்கான காரணத்தை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வெடிவிபத்தில் இறந்தவர்களின் உடல் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூரில் செயல்பட்ட யாழ் அன்ட் கோ என்ற நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் தஞ்சை மருத்துவ கல்லூரியிலும், 7 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வெடி ஆலையின் உரிமையாளர் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், அவரின் மருமகன் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    வெடி விபத்தில் உயிரிழந்த திடீர்குப்பத்தை சேர்ந்த ரவி, அவரது மனைவி சிவகாமி மற்றும் வெண்ணிலா, ராசாத்தி ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் வீட்டிற்கு ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து சுடுகாட்டிற்கு எடுத்து சென்று நள்ளிரவு 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. வெளியூரை சேர்ந்தவர்களின் சடலங்கள் அமரர் ஊர்தி வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    • திறந்தவெளி சுடுகாட்டை அகற்றி மின்மயானம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.
    • சுடுகாடு அமைந்துள்ள இடம் நீர் நிலை என்பதால் இங்கு உடனடியாக நவீன மயானம் அமைக்க முடியவில்லை.

    தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்டது சிட்லபாக்கம். இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிட்லபாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் பொதுமக்களின் வேண்டு கோளுக்கு இணங்க சுமார் ரூ.23 கோடி செலவில் தூர்வாரப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏரிக்கரையில் நடைபயிற்சி செல்பவர்களுக்கு தனிநடை பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஏரியை சுற்றி நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி சென்று வருகின்றனர். மேலும் சிட்லபாக்கம் ஏரியை முன்மாதிரியான ஏரியாக மாற்ற திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிட்லபாக்கம் ஏரியின் ஒரு புறத்தில் 44-வது வார்டுக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஏரிகரையை ஒட்டி பழைய சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டின் அருகில் ஏராளமான குடியிருப்புகள், தனியார் பள்ளி உள்ளது.

    இந்நிலையில் இந்த சுடுகாட்டில் பழைய முறைப்படியே கட்டைகளை வைத்து திறந்தவெளியில் இறந்தவர்களின் உடல்கள் தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து வெளியேறும் புகை மற்றும் துர்நாற்றத்தால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த திறந்தவெளி சுடுகாட்டை அகற்றி மின்மயானம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, சிட்லபாக்கம் பேரூராட்சியாக இருந்த போதே பாலாஜி அவன்யூ பகுதியில் எரிவாயு தகன மேடை உள்ளது. தற்போது தாம்பரம் மாநகராட்சி உடன் இணைந்த பின்பும் இந்த சுடுகாட்டை நவீனமாக்க இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பை விட தற்போது சிட்லபாக்கம் பகுதியில் மக்கள்தொகை அதிகரித்து உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து கூடுதலாக உடல்கள் வருவதால் ஏரிக்கரையோரம் உடல்கள் எரிக்கப்படுகின்றன என்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த சுடுகாடு அமைந்துள்ள இடம் நீர் நிலை என்பதால் இங்கு உடனடியாக நவீன மயானம் அமைக்க முடியவில்லை. பொதுப்பணி துறையின் அனுமதி கிடைத்த பின்பு இங்கு நவீன மயானம் அமைக்கப்படும் என்றனர்.

    • தகன மேடைக்குள் வைக்கப்பட்ட 40 நிமிடங்களில் தகனம் நிறைவடைந்து விட்டதாக சொல்லி உறவினர்களிடம் அஸ்தியை ஒப்படைத்துள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    உயிரோடு இருக்கும் போது எவ்வளவு மரியாதை கொடுக்கப்படுகிறதோ அதைவிட அதிகமாக இறந்த பிறகு உடலுக்கும் வழங்குவதுதான் மரபு. எனவேதான் இறந்தவர்களின் உடல்களை உரிய மரியாதையுடன் தகனம் செய்கிறார்கள்.

    சென்னையில் மாநகராட்சி சார்பில் ஏராளமான மின் மயானங்கள் செயல்படுகிறது. இந்த மயானங்களுக்கு தகனம் செய்ய கொண்டு செல்லப்படும் உடல்களை தகன மேடைக்குள் வைப்பதற்கு முன்பு உறவி னர்கள் மரியாதை செலுத்துவார்கள். பின்னர் மயான பணியாளர்கள் அந்த உடலை பெற்று எரி மேடைக்குள் வைப்பார்கள்.

    எரியூட்டப்படும் உடல்கள் முற்றிலும் எரிந்து சாம்பல் கிடைப்பதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும். அப்படித்தான் மயானங்களில் இருந்து தகனம் செய்யப்பட்டவர்களின் சாம்பலை உறவினர்கள் பெற்று செல்வது வழக்கம்.

    சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் 68 வயதான இறந்தவர் உடலை எரிப்பதற்காக உறவினர்கள் கொண்டு சென்றனர். முறைப்படி உடலை பணியாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். தகன மேடைக்குள் வைக்கப்பட்ட 40 நிமிடங்களில் தகனம் நிறைவடைந்து விட்டதாக சொல்லி உறவினர்களிடம் அஸ்தியை ஒப்படைத்துள்ளனர்.

    ஆனால் இவ்வளவு விரைவாக எப்படி எரியும் என்று சந்தேகப்பட்ட உறவினர்கள் சிலர் தகன மேடையை சென்று பார்த்துள்ளார்கள். அப்போது அரைகுறையாக எரிந்த உடல் உள்ளே இருக்கும் போதே மற்றொருவர் உடலை எரியூட்ட உள்ளே திணித்ததை பார்த்து இருக்கிறார்கள். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீ ஜுவாலைக்குள் அரைகுறையாக எரிந்த நிலையில் உடல் இருக்கும் நிலையில் இன்னொரு உடலை திணிப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார்கள்.

    இந்த தவறை செய்த 3 பணியாளர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வாளர் பிரபு ஜீசஸ் கூறினார்.

    இங்கு நாள் ஒன்றுக்கு 4 உடல்களை மட்டுமே எரிக்க முடியும் என்றும் மாலை 4 மணியளவில் மேலும் 2 உடல்கள் தகனத்துக்கு காத்திருந்ததாகவும் கூறினர்.

    அதிகாரிகள், காவல் துறை தலையிட்டு இரவு 11 மணியளவில் உடல் தகனம் நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட மயானத்தில் இந்த மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், எரிவாயுவை மிச்சப்படுத்த இந்த மாதிரி செயல்படலாம் என்று சந்தேகப்படுவதாகவும் புகார் கூறினார்கள்.

    இதில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    • தற்கொலை செய்த வாலிபர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது.
    • 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு காலனியை சேர்ந்தவர் காஞ்சி வனத்துரை. இவரது மகன் வருண்(23). நேற்று இவர் குடும்ப பிரச்சி னை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து தந்தை காஞ்சி வனத்துரை, உறவின ர்களுடன் சேர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் வருணின் உடலை கூத்தியார் குண்டு சுடுகாட்டில் எரித்து விட்டனர்.

    தகவல் அறிந்த நிலையூர் கிராம நிர்வாக அதிகாரி கந்தவேலு இதுகுறித்து ஆஸ்டின் பட்டி போலீசில் புகார் செய்தார். இதை யடுத்து போலீசார் காஞ்சி வனத்துரை, மகன் பாவ ஈஸ்வரன், உறவினர்கள் கார்த்திக், பிரவீன், பிச்சை ராஜா, வேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார்.
    • ஜெயந்த் உடலுக்கு இன்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம்-மல்லிகா தம்பதியின் மகன் ஜெயந்த்(35). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அருணாச்சல பிரதேசத்தில் திரான் பகுதியில் மேஜர்ஜெயந்த், லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.

    ஜெயந்தின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டது. ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட மேஜர் ஜெயந்த் உடலுக்கு இன்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைதொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தில் மேஜர்ஜெயந்த் உடல் வைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி, தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ, தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேஜர் ஜெயந்த் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அதனைதொடர்ந்து மதுரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் பயின்றார். கல்லூரி என்.சி.சியில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனைபடைத்தார். இதற்காக குடியரசு தினவிழாவில் பங்கேற்று பதக்கம் பெற்றார். ராணுவத்தில் கடந்த 2010-ம் ஆண்டு சேர்ந்தார். 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார்.

    பைலட் பயிற்சியில் தேர்வுபெற்று 2018-ம் ஆண்டு ஸ்ரீநகரில் பைலட்டாகவும், 2021-ம் ஆண்டில் அசாமில் மிசோரி ராணுவ மையத்தில் மேஜராகவும் உயர்ந்தார். 2019-ம் ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான செல்லாசாரதாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    இவர் தனது கணவருடன் மிசோரி ராணுவ குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள ராணுவகுடியிருப்பில் மேஜர்ஜெயந்தின் தந்தை வசித்து வருகிறார்.

    மேஜர் ஜெயந்தின் தந்தை ஆறுமுகம் தெரிவிக்கையில், எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். எனது சகோதரரும், ராணுவத்தில் பணியாற்றினார். அதேபோல நானும் ராணுவத்தில் சேர முயன்றும் முடியவில்லை. இதனைதொடர்ந்து எனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று சிறுவயது முதலே தெரிவித்து வந்தேன். அவரும் அதற்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இன்னும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இருந்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இருந்தபோதும் அவரது தற்போதைய சேவை வரை மனநிம்மதி அளிக்கிறது என்றார்.

    • இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
    • இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). தொழிலாளி . இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    லட்சுமியின் தாயார் இறந்ததை அடுத்து அவரது தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு 2-வது மனைவியுடன் வசித்து வருகிறார். இதனால் லட்சுமியின் தங்கை தனியாக வசித்து வந்தார்.

    இதையடுத்து லட்சுமி தனது தங்கை மகேஸ்வரியை (22) தனது கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு தங்கியிருந்தார். சதீஷ்குமார் லட்சுமியின் தங்கை மகேஸ்வரியை விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார். தங்கையை பிரிய மனம் இல்லாத லட்சுமிக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்

    கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் லட்சுமி சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய உடல் அருகே அழுது கொண்டிருந்த ஐயம்மாள் ஒரு மணி நேரத்தில் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார்.
    • கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் தர்மாபுரி சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அடுத்துள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தர்மாபுரி புதுகாட்டு வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (90). இவரது மனைவி ஐயம்மாள் (85).

    இருவருக்கும் திருமணம் ஆகி 60 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற மகனும், மாரியம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

    முத்துசாமி, ஐயம்மாள் தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்தனர். முத்துசாமி நெசவுத்தொழில் செய்து வந்தார். ஐயம்மாள் கணவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவரை கவனித்து வந்தார்.

    வெளியிடங்களுக்கு போகும் போதும், திருமணம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் போது இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர்.

    இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக இருவரும் வீட்டிலேயே இருந்து வந்தனர். அவர்களை மகனும், மருமகளும் பராமரித்து வந்தனர். சம்பவத்தன்று மதியம் முத்துசாமி உயிரிழந்தார்.

    கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய உடல் அருகே அழுது கொண்டிருந்த ஐயம்மாள் ஒரு மணி நேரத்தில் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார்.

    உடனே உறவினர்கள் ஐயம்மாளை தூக்கி தண்ணீர் தெளித்தனர். ஆனால் எழுந்திரிக்காம லேயே கணவன் உடல் மீது உயிரைவிட்டார். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரை விட்ட சம்பவம் உறவினர்கள், ஊர்மக்களிடம் துக்கத்தை மேலும் அதிகரித்தது.

    இதனையடுத்து இறந்தவர்கள் உடலை அருகருகே வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றி சலங்கபாளையம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று ஒரே மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

    கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் தர்மாபுரி சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    தாயின் இறுதி சடங்குக்கு மகள் வரமறுத்ததால் அவரது உடலை அக்கம் பக்கத்தினரே தகனம் செய்த உருக்கமான சம்பவம் பால்கரில் நடந்து உள்ளது.
    வசாய் :

    பால்கர் மாவட்டம் மனோர், டோங்கிரி பகுதியை சேர்ந்தவர் திராஜ் பட்டேல் (வயது70). இவரது மனைவி நிருபென் (65). நேற்று முன்தினம் நிருபென் திடீரென இயற்கை மரணம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஆமதாபாத்தில் வசிக்கும் நிருபெனின் ஒரே மகளுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது மகள் கொடுத்த பதில் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. அவர் தனக்கு அதிக வேலைகள் இருப்பதால் தாயின் இறுதி சடங்கிற்கு வரமுடியாது என கூறினார்.

    நிருபெனின் கணவர் திராஜ் பட்டேல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். மகள், இறுதி சடங்கிற்கு வர முடியாது என கூறியதால் மனைவியின் உடலை எப்படி தகனம் செய்வது என அவர் தவித்தார். அதை பார்த்து மனம் உடைந்த அக்கம் பக்கத்தினர் நிருபெனின் உடலை அவர்களே தகனம் செய்துவிட முடிவு செய்தனர்.

    அவர்கள் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் நிருபெனின் உடலை தூக்கி சென்று இந்து முறைப்படி தகனம் செய்தனர்.

    மனைவி உடலுடன் சோகத்துடன் உட்கார்ந்து இருக்கும் திராஜ் பட்டேல்.


    இதையடுத்து அக்கம் பக்கத்தினர், தாயின் அஸ்தியை வந்து வாங்கி செல்லுமாறு உயிரிழந்த பெண்ணின் மகளை தொடர்பு கொண்டு கூறினர். அப்போது அவர், தாயின் அஸ்தியை கூரியரில் அனுப்பும்படி கூறியது பக்கத்து வீட்டுக்காரர்களை மேலும் வேதனைப்படுத்தியது.

    இதுகுறித்து நிருபென்னிற்கு இறுதி சடங்கு செய்த பக்கத்துவீட்டுக்காரர் கான் கூறும்போது, ‘‘அவரது மகளை நேற்று தொடர்பு கொண்டு அஸ்தியை வாங்கி செல்லுமாறு கூறினோம். அப்போது அவர் கூரியரில் அஸ்தியை அனுப்புமாறு கூறியதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ஆமதாபாத்தில் இருந்து பால்கர் வர 7 மணி நேரம் கூட ஆகாது’’ என வேதனையுடன் கூறினார்.

    பார்சி சமூக பெண்ணின் இறுதி சடங்கிற்கு மகள் கூட வரமறுத்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரது உடலை தகனம் செய்து எல்லா சடங்குகளையும் செய்ததை பார்த்து அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். 
    ×