search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊருக்கு சென்ற மனைவி திரும்பி வராதால்  தூக்கு போட்டு விவசாயி தற்கொலை
    X

    ஊருக்கு சென்ற மனைவி திரும்பி வராதால் தூக்கு போட்டு விவசாயி தற்கொலை

    • கணக்கம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
    • கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் அருகே உள்ள ஆர்.பி புதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 55) விவசாயி. இவர் தற்போது தனது மனைவி பொன்னி மற்றும் மகள்கள் நித்தியபிர சாதனி (13), ஆனந்தபிர சாதனி (10) ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பா ளையத்தை சேர்ந்த செல்வ ராஜ் என்பவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மகளுக்கு விடு முறை என்பதால் பொன்னி தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டினத்திற்கு சென்றிருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் மனைவிக்கு போன் செய்து விவசாய நிலத்தில் வேலை இருப்பதால் உடனே புறப்பட்டு ஊருக்கு வரு மாறு கூறியுள்ளார். அப்போது மனைவி பொன்னி சில தினங்களுக்கு பிறகு வருவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மாதேஸ்வரன் அவரது குடிசை வீட்டிற்கு வெளியே நைலான் கயிற்றால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.

    பின்னர் இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடி யாக ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு மாதேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் சம்ப வம் குறித்து வேலக வுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×