search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே கள் விற்றவர் மீது வழக்கு பதிவு
    X

    சின்னசேலம் அருகே கள் விற்றவர் மீது வழக்கு பதிவு

    • சட்டவிரோதமாக தென்னை மரத்துக்கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒருவர் பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் தென்னை மரத்துக்கள்ளினை விற்பனைக்காக வைத்திருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக தென்னை மரத்துக்கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையிலான போலீசார் தோட்டப்பாடி கிராமம் சென்றனர். அங்குள்ள விவசாய நிலத்தில் சோதனை மேற்கொண்ட போது குழந்தைசாமி என்பவருடைய மகன் விஜயன் என்பவருடைய விவசாய நிலத்தில் ஒருவர் பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் தென்னை மரத்துக்கள்ளினை விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் சின்னசேலம் குமரன் நகர் பிச்சப்பிள்ளை என்பவருடைய மகன் பெரியசாமி (வயது 50) என்பது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த 10 லிட்டர் தென்னை மரத்துக் கள்ளினைபறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×