என் மலர்
நீங்கள் தேடியது "wires"
- கான்கிரீட் பெயர்ந்து சிமெண்டு கம்பிகள் வெளியே தெரியும் அளவில் காணப்படுகிறது.
- பொருட்கள் வாங்கும் போது தொட்டி இடிந்து விழுமோ என்ற அச்சம்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பனையூர் ஊராட்சி கீழப்பனையூர் கிராமத்தில் கிராம கூட்டுறவு அங்காடி செயல்பட்டு வருகிறது.
இதில் கீழ பள்ளிச்சந்தம், திருப்பத்தூர், கீழப்பனையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்த அங்காடி வாசலில் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது. தற்போது இந்த தொட்டியின் நான்கு தூண்களும் சேதமடைந்துள்ளது.
மேலும் கான்கிரீட் பெயர்ந்து சிமெண்டு கம்பிகள் வெளியே தெரியும் அளவில் காணப்படுகிறது.
எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அங்காடிக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ? என அச்சப்படுகின்றனர்.
எனவே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அங்காடிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கூறியதாவது:- அங்காடி வாசலில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக உள்ளது.
இந்த தொட்டியின் தூண்கள் அனைத்தும் சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால் நாங்கள் பொருட்கள் வாங்கும் போது தொட்டி இடிந்து விழுமோ? என்ற அச்சத்துடன் பொருட்களை வாங்கி செல்கிறோம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் ெதரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- மின்மாற்றிலிருந்து உயரழுத்த மின் கம்பி திடீரென்று நெருப்பு பொறிகளுடன் எரிந்து கீழே விழுந்தது.
- மின்கம்பி நிழற்குடை மீது பட்டு குடை மற்றும் பழங்கள் எரிந்து சேதமடைந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் பட்டமங்கலதெரு முக்கிய கடைவீதி பகுதியாகும். இந்த பகுதியில் வங்கிகள் மருத்துவமனைகள் துணிக்கடைகள் பழக்கடை கள் மற்றும் பள்ளி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதி எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும்.
நேற்று அப்பகுதியில் தனியார் வங்கிக்கு எதிரே உள்ள மின்மாற்றிலிருந்து மின்சாரம் செல்லும் உயிர் அழுத்த மின் கம்பி திடீரென்று நெருப்புப் பொறிகளுடன் எரிந்து கீழே விழுந்தது. வங்கிக்கு எதிரே பழக்கடை வைத்துள்ள குணசேகரன் என்பவர் தள்ளுவண்டி கடை மீது மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதில் நிழலுக்கு பயன்படுத்தப்படும் மிகப்பெரிய குடை இருந்த காரணத்தால் மின் கம்பி அதில் பட்டு குடை மற்றும் பழங்கள் எரிந்து சேதம் அடைந்தது, உடனே குணசேகரன் அலறியடித்து வெளியேறியதால் உயிர் தப்பினார்.
தகவல் மின்சாரம் துண்டி க்கப்பட்டு அப்பகுதியில் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதைப்போல் மார்க்கெட் பகுதி செட்டி தெரு, தர்மபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்னணு மற்றும் மின்சாரப் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது காரணமாக மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.
- அத்தியாவசிய பொருட்களை மட்டும் வைத்துவிட்டு வெளிப்புறத்தில் தடுப்புகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் கடலோர பகுதியிலிருந்து மீனவ குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அருகிலேயே சுனாமி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு அரசின் சார்பாக 725 சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்த வீடுகள் கட்டப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உட்புற மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.
மேலும் அவ்வப்பொழுது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் அச்சமடைந்த மீனவர்கள் வீட்டின் உள்ளே அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வைத்துவிட்டு வெளிப்புறத்திலேயே தடுப்புகள் அமைத்து தனியாக வசித்து வருகின்றனர்.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சிதிலமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டுமென மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை:
வடமதுரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக அலுமினிய கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அலுவலகத்துக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்து மின் வாரிய உதவி பொறியாளர் மகேஸ்வரி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யலூர் அருகே உள்ள கந்தமநாயக்கனூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மின் வயர்கள் அறுத்து திருடப்பட்டன. தொடரும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யார்? என தெரியாததால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பீதியடைந்துள்ளனர்.