பல்லடம் அருகே இரும்பு கடைகளில் வயர்களை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

காப்பர் கம்பிகள் கொண்ட வயர்களை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது.குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது. கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் ஏராளமான கடைகள் உள்ளது. மேலும் அதிகாலை நேரங்களில் இந்த பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையி ல் நாராயணநாயக்கம்புதூர் பிரிவு மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள பழைய இரும்பு கடைகளில் அதிகாலை நேரத்தில் காப்பர் கம்பிகள் கொண்ட வயர்களை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டும் வருகிறது.

இதனால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதார துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பொதுமக்களே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று எச்சரிக்கை செய்தும் அதையும் மீறி அவர்கள் வயர்களை எரிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் பாராமு கமாக இருக்கிறா ர்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உடனடியாக அவர்க ளை எச்சரித்து அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து இது போன்ற செயல்கள் நடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com