search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanitation issue"

    • காப்பர் கம்பிகள் கொண்ட வயர்களை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது.
    • குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது. கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் ஏராளமான கடைகள் உள்ளது. மேலும் அதிகாலை நேரங்களில் இந்த பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையி ல் நாராயணநாயக்கம்புதூர் பிரிவு மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள பழைய இரும்பு கடைகளில் அதிகாலை நேரத்தில் காப்பர் கம்பிகள் கொண்ட வயர்களை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டும் வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதார துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பொதுமக்களே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று எச்சரிக்கை செய்தும் அதையும் மீறி அவர்கள் வயர்களை எரிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் பாராமு கமாக இருக்கிறா ர்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உடனடியாக அவர்க ளை எச்சரித்து அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து இது போன்ற செயல்கள் நடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய குடியிருப்புகளில் வந்தவர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.
    • சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் இருந்து மாணிக்காபுரம் செல்லும் ரோட்டில், அம்மாபாளையம் பிரிவு அருகே ரோட்டோரங்களில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது;- ரோட்டோரங்களில் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள், தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளை வெளியே உள்ளவர்கள் இங்கு வந்து கொட்டிச் செல்கின்றனர். இங்குள்ளவர்கள் யாரும் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவது இல்லை, அருகே உள்ள புதிய குடியிருப்புகளில் வந்தவர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் சிலர் வாகனங்களில் வந்து இரவு நேரங்களில் குப்பைகளை வீசி செல்கிறார்கள். இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது.

    சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர்.மேலும் கண்ணெரிச்சல் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது.இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×