search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோட்டோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
    X

    குப்பைகளை வீசி செல்லும் காட்சி. 

    ரோட்டோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

    • புதிய குடியிருப்புகளில் வந்தவர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.
    • சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் இருந்து மாணிக்காபுரம் செல்லும் ரோட்டில், அம்மாபாளையம் பிரிவு அருகே ரோட்டோரங்களில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது;- ரோட்டோரங்களில் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள், தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளை வெளியே உள்ளவர்கள் இங்கு வந்து கொட்டிச் செல்கின்றனர். இங்குள்ளவர்கள் யாரும் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவது இல்லை, அருகே உள்ள புதிய குடியிருப்புகளில் வந்தவர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் சிலர் வாகனங்களில் வந்து இரவு நேரங்களில் குப்பைகளை வீசி செல்கிறார்கள். இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது.

    சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர்.மேலும் கண்ணெரிச்சல் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது.இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×