search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blockage"

    • சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் காவிரி பாலம் மிகவும் பழமையான பாலம் ஆகும். இந்த பாலத்தின் வழியாக தான் ஆரம்ப காலத்தில் பஸ் போக்கு வரத்து மற்றும் கனரக போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பாலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    கனரக வாகனங்கள், பஸ் உள்ளிட்டவை மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள புது பாலம் வழியாக சென்று, வருகிறது.

    இந்தப் பாலத்தின் இருபுறத்திலும் கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு சுற்றுலா வருப வர்கள் மற்றும் அந்த வழி யாக செல்பவர்கள், இந்த பாலத்தின் மீது நின்று காவிரி ஆற்றின் அழகினை ரசித்து செல்வர். இந்த நிலையில், பாலத்தின் தடுப்புகளில் உள்ள இரும்பு கம்பிகள் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

    எனவே சிறுவர்கள், பாலத்தின் மீது நின்றி ருக்கும்போது தவறி ஆற்றில் விழ வாய்ப்புகள் உள்ளது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் இதில் தவறி விழ வாய்ப்புள்ளது.

    நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்களின் பாது காப்பினை உறுதி செய்ய வேண்டும் என, அந்த பகு தியைச் சேர்ந்தபொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.
    • ஆற்றில் இணைப்பு எற்படுத்தி அடைப்புகளை சரிசெய்து மழை நீரை வடிகட்டினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம், பட்டமங்கலம் ஊராட்சி, சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் மழைநீர் சூழ்ந்து கொண்டது.

    இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இதையடுத்து தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி பொக்லைன் கொண்டு தண்ணீரை பள்ளவன் ஆற்றில் இணைப்பு எற்படுத்தி அடைப்புகளை சரிசெய்து மழை நீரை வடிகட்டினார்.

    இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், கிராம அலுவலர் நெப்போலியன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மழை நீரை வடிகட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
    • ஆள்நுழை குழி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு துர்நாற்றமும் வீசுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளிஅக்ரகாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டுள்ளது.

    ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஆள்நுழை குழி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு துர்நாற்றமும் வீசுகிறது. இந்த சாலையில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும்.

    கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். வாகனங்களும் கடும் சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றன. தொடர்ந்து இது போல் சாலைகளில் கழிவு நீர் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக போர்கால அடிப்படையில் இதனை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கருமாண்டிசெல்லிபாளையம் சித்தன்பட்டி குளம் நீர் வழிப்பாதைகளை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது நீர் வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    பெருந்துறை:

    கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி காஞ்சிகோயில் சாலையில் சித்தன் பட்டி குளம் உள்ளது. இந்த குளத்திற்கு சீலம்பட்டி, எல்லப்பாளையம், ஒண்டிப்புலியங்காடு, மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இருந்து மழை நீர் வடிந்து குளத்திற்கு வருமாறு நீர்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த நீர்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு கடந்த 3 முறை பெய்த மழை நீர் வீணாகி போனது. இது குறித்து பொதுமக்கள் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ.விடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நீர் வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே.எம். பழனிசாமி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே. செல்வராஜ், பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், வார்டு செயலாளர் ராஜா, கே.பி.எஸ். மோகன் குமார்,

    என்.எஸ்.கே. சக்திவேல், எஸ்.ஆர். வி.சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபால், ரகு, எல்லப்பாளையம் நடராஜ்,

    காலனி துரை, டீக்கடைத்துரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் பொதுமக்களும் உடன் இருந்தனர்.

    • பல்லடம் செல்லும் சாலை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும்.
    • சில மாதங்களாக சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும். அதிக வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றன. திருப்பூர் மாநகராட்சி 53 -வது வார்டுக்குட்பட்ட இந்த சாலையில் நொச்சிப்பாளையம் பிரிவு, மூலக்கடை அருகே சாக்கடை நீர் செல்லும் வாய்க்கால் அமைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் சாக்கடை அடைப்பினால் தேங்கிய நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாக்கடை நீரில் செல்ல வேண்டியுள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ×